பக்கம்:எழில் விருத்தம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நானிலம் மலையிடயில் பிறந்த உயிர் மக்களினம் செடகொடிகள் மரங்கள் யாவும் அலையிடையில் பிறந்தனவும் அடர்வான நீள்விசும்பில் அமைந்த யாவும் நிலையிடையில் பிறப்போக்கும் நீளசிறப்பில் ஒவ்வாதாம் நெடுநாள் உண்மை! தலையிடையில் மனித இனம் தம்செயலின் சிறப்பின்றித் தழைத்தி டாதே! கடல்சூழந்த உலகத்தில் கல்தோன்றி மண்தோன்றாக் காலம் தொட்டே உடல்சூழ்ந்த மனித இனம் உயிர்சூழ்ந்த பிறப்பொக்கும்! உண்மை! உண்மை! அடல்சூழ்ந்த வெற்றியினை அடைந்தோர்கள் பலருண்டாம் ஆனால் என்றும் மடல்சூழ்ந்த மண்ணுலகில் மாப்புகழை அழியாமல் வளர்த்தார் வேறே!