பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வல்லிக்கண்ணன்



இன்னும் இதேபோல் ஓய்வூதியம் (தியாகிகளுக்கு) அதையும் வெகு காலம் வாங்காமல் இருந்தார். பிறகு உறவினரோ நண்பரோ ஒருவர் உனக்கு தேவையில்லை என்பதற்காக வேண்டாம் என்கிறாயே; பிற்காலத்தில் உன் மனைவிக்கு உபயோகமாக இருக்கும் என்று வற்புறுத்தியதன் பேரில் மத்திய அரசு ஊதியத்தை மட்டும் சி.சு.செ. ஏற்றுக்கொண்டார்.

இன்னும் பல இலக்கிய அமைப்புகள்கொடுக்க முன்வந்த பண முடிப்புகளை மறுத்து, தன்னுடைய இலக்கியப் பணிக்கு கிடைத்த பாராட்டைத் தவிர வேறு எதையும் அவர் ஏற்றுக்கொண்டதில்லை.

காந்தீயத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர் சி.சு. செல்லப்பா.

இறுதி மூச்சுள்ள வரை காந்தீயவாதியாகவே வாழ்ந்து மறைந்தார். என்றும் இருக்கும் தமிழ் இலக்கிய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

125