பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுத்து - சி.சு. செல்லப்பா

வரியில் புத்தக விமர்சனங்கள் எழுதப்படும் இந்தக் காலத்தோடு ஒப்பிட்டால் தி.ஜா. நூலாசியர் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் எழுதியிருக்கும் விமர்சனத்தைப் படிக்கும் வாசகர்கள் அந்த நூல்களை தேடிப்பிடித்துப் படிக்கும் அளவுக்கு சுவையும் பயனும் மிக்கதாக புத்தக விமர்சனப் பகுதி அமைந்திருப்பதைக் காணலாம்.

32 பக்கங்களில் இத்தனை பேரின் கருத்தாழமும் கலைநயமும் மிளிரும் படைப்புகளை வரிவிடாமல்படித்து முடிக்கும் வாசகர்கள் அனைவரும் ‘எழுத்து’ எனக்குப் பிடித்திருக்கிறது என்று வாய்விட்டுப் பாராட்டும் அளவுக்கு வந்துள்ள முதல் இதழின்-20ஆம் பக்கத்தில் சி.சு.செல்லப்பா வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

"இந்த எழுத்து ஏடு உங்களுக்குத் திருப்தி அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்குத் தெரிந்த இலக்கிய வாசகர்களுக்கு சிபாரிசுசெய்யுங்கள். அவர்கள் முகவரியை எனக்கு எழுதி அனுப்புங்கள் அவர்களுக்கு எழுதுகிறேன். இது பெரிய ஒத்தாசை" - என்பதே அந்த வேண்டுகோள்.

134