பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

சொன்னவன் புலவன்!
கண்டவன் கலைஞன்!
முழிப்பவன்
நீயும் நானும் கேவலம்
வாசகக் கும்பல்!

டி.கே. துரைஸ்வாமி சோதனைக்காவே சோதனை என்ற தன்மையில் கவிதை முயற்சிகளில் தீவிரமாக முனைந்தது போல் தோன்றுகிறது. படிப்பவரைக் குழப்பமுற வைப்பது அவரது கவிதைகள் சிலவற்றின் முக்கிய நோக்கம் என்று எண்ண வேண்டியிருக்கிறது. க.நா.சு. புதுக்கவிதைக்கு வகுத்த இலக்கணத்தை - 'கவிதை சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்க வேண்டும், தெளிவு தொனிக்க வேண்டும். ஆனால் சிக்கல் விடுவிக்கச் கூடாததாகவும் இருக்க வேண்டும். கவிதை நயம் எது என்று எடுத்துச் சொல்லக் கூடாததாக இருக்க வேண்டும். புரியவில்லை போல இருக்க வேண்டும் அதே சமயம் பூராவும் புரியாமலும் இருந்துவிடக் கூடாது’ என்பதை அப்படியே பின்பற்ற ஆசப்பட்டவர் துரைஸ்வாமி என்று எனக்குப் படுகிறது.

‘வர்ணபேதம்’ என்ற கவிதையை அதற்கு உதாரணமாக கூறலாம்.

கற்புக்கு முல்லை;
கடவுளுக்குத் தாமரை,
காமத்துக்கு அல்லி,

என்று சொன்னால்,
முல்லைக்கு வெள்ளை;
தாமரைக்குச் சிவப்பு,
அல்லிக்கு இருட்டு:

என்று சொன்னால்;
முல்லை மலர
அல்லி சோரும்
தாமரை மலர
முல்லை சோரும்;

230