பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்


யாப்புடைத்த கவிதை
அணையுடைத்த காவிரி
முகிலுடைத்த மாமழை
முறட்டுத் தோலுரித்த பலாச்சுளை
வறட்டுக் கோஷா எறிந்த மங்கை.
யாப்பற்ற கவிதை
அருவருக்கும் அலியல்ல;
மார்கழியின் மொட்டிரவில்
தென்றல் தரும் சூடுபோக்க
வெண்ணிலவின் பயன்துய்க்க;
உடை கலைந்த ஒரு தலைவி
இயற்கையெழில் கொட்டியிருக்க
செயற்கை யணி வேண்டாமென்று
ஒப்பனையை நீக்கிவிட்ட
வனப்பொளிர் கனவுப் பெண்;
கார்குழலாக மெல்லாம் கவர்ந்து எழில் கனிய வீங்கி
ஈர்க்கிடை போகலாகா எதிரெதிர் பணைந்து வீங்கும்
வார்க்குலம் அறுந்த கொம்பை வரிமுலை
ஐயா இது.


4


அன்று மணிக்கதவை
தாயர் அடைப்பவும்
மகளிர் திறப்பவும்
செய்தார் மாறி மாறி;
என்றும்
புலவர் அடைப்ப
கவிஞர் திறப்பார்.

சி.மணிசிறிய சிறிய-ஆயினும் நயங்கள் நிறைந்த-கவிதைகள் அநேகம் எழுதியிருக்கிறார். 1963-64வருடங்களில். எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடலாம்.

261