பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(TS555೯ಹಣಹT}– 11 : வெளியில் பரவிவிடுமோ... - என்று அசூயைப்பட்டு இவர் அன்போடு கொடுத்த புத்தகத்தைக் கையில் புரட்டிப் பார்த்துக் கொண்டே. ஒரு ஸ்தாபனத்தில் வேலை செய்வதோடு மட்டும் திருப்திப்படனும். அப்படியில்லாமல் இது போலப் புஸ்தகம் வெளிவரணும்னு நினைக்கிறதும், அந்தப் புஸ்தகத்துக்குப் புகழ் 'ராயல்டி எல்லாம் கிடைக்கணும்னு நினைக்கிறதும் சோரம் போறது மாதிரி. நல்லசம்சாரம்னாப்புருஷன்வாங்கிக் கொடுத்த சுங்குடிப் புடவையே போதும்னு ஒரு திருப்தி மனப்பான்மை வேணும். புருஷன் வாங்கிக் கொடுத்த சுங்குடிப் புடவை போறாதுன்னு சோரம் போறவ மாதிரி இப்பிடிப் புஸ்தகம் எழுதற ஆசை. அது, இது எல்லாம் கூடாது" - என்று தர்மோபதேசம் செய்தார். ஒரு வேடிக்கை என்னவென்றால் மேலே கண்ட பத்திரிகை முதலாளிக்குச் சொந்த வாழ்க்கை அப்படி அமைந்து விட்டதன் காரணமாகவோ என்னவோ யாரிடம் எதைப் பேசுவதற்கு வாயைத் திறந்தாலும், சோரம் போவது-கள்ளப்புருஷன், விபசாரம்-அவிச்ாரித்தனம்-என்று இப்படி வழக்கமான நாலைந்து 'அநுபூதி வார்த்தைகள் தான் வந்து விழும். - மேலே கண்ட அவருடைய உபதேசப்படி கிடைக்கிற முடிவோமகா மகாபயங்கரமானது. அதாவது தரமற்ற பத்திரிகை முதலாளிகளாகிய இந்த ஈனப் பிறவிகள் எல்லாம் தங்களிடம் வேலை பார்க்கும் உதவியாசிரியர்களாகிய பெண்சாதிகளுக்குப் புருஷர்களாக இருக்கிறார்கள் என்றாகிறது. மேற்படி பத்திரிகை முதலாளி தன்னிடம்அன்போடு தமது சிறுகதைத் தொகுதியைக் கொடுக்க வந்த உதவியாசிரியரிடம் 'சுங்குடிப் புட்வை - உதாரணத்தைச்சொல்லி அவமானப்படுத்தியதோடு போகாமல் தன்னைப் பரிசுத்த புருஷனாக வேறு கற்பித்துக்கொண்டதுதான் தாங்க முடியாதது. இரண்டு ஃபுல் பேஜ் அட்வர்டிஸ் மெண்டிற்காக ஆயிரம் தடவை சோரம் போகிற ஆட்கள் அடுத்தவனுக்குத் தர்மோபதேசம் செய்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது. நபரின் வேண்டுகோளுக்கிணங்க வேறு சித்திரம் ஒன்றை வெளியாருக்கு வரைந்து கொடுத்தவிட்ட காரியாலயச் சித்திரக்காரர் ஒருவரிடமும் அருவருப்பு அடையத் தக்க இந்தச் சுங்குடிப் புடவை உதாரணம் அதே முதலாளியால்