பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம் "தீபம்' நா.பார்த்தசாதி G28 D 3. @莎酶 g இதர இந்திய மொழிகளின் படைப்புகள் பலவற்றை - நாவல், சிறுகதை, கவிதைகளை- மொழி பெயர்த்து வெளியிட்டு வந்தது. பிறமொழி ஆசிரியர்களைப் பற்றியும் படைப்புகள் குறித்தும் அறிமுகக் கட்டுரைகள் தீபத்தில் இடம்பெற்றன. சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த இந்திய மொழிகளின் இலக்கியங்களின் நிலைமை பற்றி தமிழ் வாசகர்கள் தெரிந்து கொள்ளதீபம் பெரிதும் உதவியது. - இலங்கை, மலேசியா எழத்தாளர்கள், அவர்களது எழுத்துக்கள் பற்றியும் தீபம் அக்கறை கொண்டிருந்தது. அவற்றுக்கான சிறப்பிதழ்களைதயாரித்து வெளியிட்டது. நினைவில் நிற்கும் முன்னுரைகள், காலத்தால் சாகாத சிறுகதைகள், ஊஞ்சல் கடிதங்கள் என்று அபூர்வமான விஷயங்களை தொகுத்துத் தந்தது. இரத்தினச் சுருக்கம் என்று. சிந்தனை மணிகளையும், மற்றும் வம்பு மேடை, மறைவாக நமக்குள்ளே என்று சுவையான தகவல்களையும், டில்லி ப்ம்பாய் கல்கத்தா மலேசியா செய்திகளைக் கூறும் கடிதங்களையும் தொடர்ந்து பிரசுரித்தது. இலங்கைக் கடிதம் அவ்வப்போது வெளியிடப்பட்டது. . நா. பார்த்தசாரதியின் படைப்பாற்றலின் பன்முகத் தன்மையை தீபம் ஒவ்வொரு இதழும் வெளிப்படுத்தியது. அவரது சீரிய சிந்தனை வீச்சையும், நகைச்சுவை உணர்வையும், சூடாகவும் சுவையாகவும் கருத்துக்கள் கூறும் திறனையும் இலக்கிய மேடை" எனும் கேள்வி-பதில் பகுதியும், பிற குறிப்புகளும் புலப்படுத்தின. நா.பா. எழுதிய தலையங்கங்கள் தனித்தன்மையோடு, சிந்தனை வேகமும் தொலைநோக்குப் பார்வையும், வழிகாட்டும் தன்மையும் கொண்டு ஒளிர்ந்தன. . தீபம் பரந்தமனப்பான்மையோடு சகல எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் வரவேற்று வெளியிட்டது. மறுமலர்ச்சி இலக்கியப் படைப்பாளிகளின் முதல் தலைமுறையினர் முதல், தொடர்ந்து வந்த தலைமுறையினரும், தங்கள் எழுத்துக்களால் தீபத்துக்கு வலிமை சேர்த்தார்கள். சிறிது காலத்துக்கு முன் எழுதத் தொடங்கி, புகழ்ப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்த எழுத்தாளர்களும் (அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன் போன்றோர்) தங்கள் படைப்புகளால் தீபத்துக்கு ஒளியூட்டிவந்தார்கள். . . . . * . . .