பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

த. கோவேந்தன்


சேதாவின் மனைவி காந்தா சிறைக்கு வந்து தன் கணவனுக்கு நேர்ந்த அவலநிலை கண்டு அலறினாள். “இந்த அவலம் கண்ட கண்கள் எனக்கு ஏன்” என்று தன் கண்களைப் பிடுங்கிக் கொண்டாள். அந்தக் கற்புக்கரசியின் கதறல் வீண் ஆகுமா? அந்த அவலக்குரல், இறைவன் காதில் படாதா?

பெரும் பூகம்பம் நிகழ்ந்தது. சிறைச்சாலை தகர்ந்தது. அந்நேரம் ஒரு குறவனும் குறத்தியும் எங்கிருந்தோ தோன்றினர். அவர்கள் தொட்டவுடனே சேதாவின் கால்கள் பொருந்திக் கொண்டன. கணவன்-மனைவி இருவர் கண்களும் ஒளி பெற்றன.

துரோணரின் வீட்டிலிருந்து தப்பிய சாந்தா திருக்குலத்தார். சேரிக்கு ஓடினாள். ஏனென்றால் சேரி முழுவதும் தீயிட்டு அழிக்கப் போவதாகத் துரோணர் கூறிக் கொண்டிருந்தார். துரோணர் கொடுமையிலிருந்து சேரிமக்களைக் காக்கவே சாந்தா அங்கே விரைந்தாள்.

துரோணர் சொன்னபடி சேரி தீப்பற்றி எரியத் தொடங்கியது.

சாந்தா, சேரிக்குழந்தைகளைக் காப்பதில் ஈடுபட்டாள். தன் உடலில் தீப்புண் ஏற்படுமே என்று அஞ்சாமல் சேரியினரைக் காப்பாற்ற முனைந்து நின்றாள்.

சாந்தா தீக்கு நடுவே சேரியிலிருப்பதைக் கேள்விப்பட்ட துரோணர் சேரிக்கு ஓடினார்.

அதற்குள் தீயில் வெந்து விடாமல் சாந்தாவைச் சேவா மீட்டு விட்டாள்.

தாங்கள் வழிபடும் இறைவன் திருவிக்கிரகத்தைக் காப்பதற்காகச் சேதாவும் காந்தாவும் ஓடினர்.

என்ன அதிசயம்! அங்கு நெருப்பே பரவவில்லை. இறைவன் முன் அமர்ந்து சேவாவும் சாந்தாவும் இறைவனை வழிப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துச் சேதாவும் காந்தாவும் இறைவன் திருவருளை எண்ணிக் கண்ணிர் சொரிந்தனர்.