பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

த. கோவேந்தன்



14. பாஞ்சாலி ஏன் சிரித்தாள்?

பாரதப் போரில் வீடுமர் அர்ச்சுனன் அம்பால் அடிபட்டு வீழ்ந்தார்

விடுமர் பெருஞானி பகவான் பரசுராமனின் மாணாக்கர் அவர் விரும்பும் போது தான் அவர் உயிர் பிரியும். அத்தகைய வரத்தை அவர் தந்தை, சந்தனு அளித்தார்.

அவர் அம்புபட்டு வீழ்ந்த காலம் தட்சிணாயணம் உத்தராயண காலத்தில் உயிர் துறந்தால்தான் மோட்சம் கிட்டும் ஆதலால் உத்தராயணம் வரும்வரை, அர்ச்சுனன் அமைத்துக் கொடுத்த அம்புப் படுக்கையில் படுத்திருந்தார்

அப்போது தருமன் அவரை வணங்கி, அரசநீதி அறிவுறுத்தும் படி வேண்டினான் கண்ணபெருமானும் அரச நீதியைத் தருமனுக்குக் கூறும்படி வற்புறுத்தினான்

அம்புப் படுக்கையில் படுத்துள்ள துன்பத்தையும் பொருட்படுத்தாமல், வீடுமர் அரசநீதி கூறத் தொடங்கினார்

அப்போது அருகிலிருந்த பாஞ்சாலி உரக்கச் சிரிக்கத் தொடங்கினாள்

அவள் சிரிப்பதற்குக் காரணம் என்ன என்று வீடுமர் கேட்டார்

“தாத்தா! வேறு காரணம ஏதும் இலலை தாங்கள் பெருஞானி நலலறம முழுவதும் அறிநதவர் உலகிலேயே உயர்ந்த குறிககோளுடன வாழந்தவர். அப்படியிருந்தும் துரியோதனன் சூதாடடம் என்னும வஞ்சனையால், எங்கள் நாட்டைய பறித்துக் கொண்ட போது, அரசநீதி துரியோதனனுககுக கூறவிலலை துச்சாதனன், என்னை மானபங்கப படுததிய போதாவது அறவுரை கூறித் தடுத்திருககலாம் எங்களைக் காட்டுககு அனுப்பாமல தடுத்திருக்கலாம் அப்போது வாய் திறவாமல, தீயவர் செயலுக்கு