பக்கம்:ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாபாரதக் கதைகள்

73



அந்தக் கணிகைக்கு இறுதிக் காலம் அடுத்தது தான் செல்லமாக வளர்த்த கிளியைச் சீதாராம் கீதாராம் என்று அழைத்துக்கொண்டிருக்கும் போதே உயிர் பிரிந்தது

மரணத் தருவாயில் சீதாராம் என்ற இறைவன் திருநாமத்தை உச்சரித்தமையால், இறைவன் தூதர்கள் வந்து அவளைத் தெய்வ விமானத்தில் மிக்க மரியாதையுடன் ஏற்றிப் பரமபதத்துக்கு அழைத்துச் சென்றனர்

இருடிகளும் முனிவர்களும் பலகாலம் தவம் செயதும் எளிதிற் பெற இயலாத வானோர்க்கு உயர்ந்த உலகத்தைச் சீதாராம் என்ற திருநாமம் உச்சரித்தமையால் பெற்றாள் ஒரு கணிகை என்பது வியப்புத் தானே!