86
த. கோவேந்தன்
நண்பன் உன் நலமே என்நலம் வா நம் வீட்டுக்குப் போவோம்
சீமாலிகன்: என் பாக்கியமே பாக்கியம் பிறவிப் பெரும்பயன் இன்றே கிட்டியது (போகின்றனர்)
சீமாலிகன்: (தனக்குள்) கண்ணனை எளிதில் வசம் செயது விட்டேன். இனிக் காரியம் கைகூடத் தடை இல்லை
இடம் ஊர்ப் பொது மன்றம் காலம் பகல் பாத்திரங்கள் ஆயர் பெருமக்கள்
தலைவர்: நாம் இங்கு ஏன் கூடியுள்ளோம் என்பதனை நீங்கள் அறிவீர்கள் சீமாலிகன், கண்ணனுடன் நட்புப்பூண்டு, நம் ஆயர்பாடிக்கு வந்தது முதல் அவன் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. அவனை அடக்குவதற்கு-வழி காண வேண்டும் அதைப் பற்றி ஆலோசனை செய்யவே இங்குக் கூடியுள்ளோம்.
ஒருவர்: ஐயன்மீர்! என் மகள் தண்ணீர் எடுக்கப் போகும் போது, வழிமறித்து அடாத சொற்களைக் கொட்டியிருக்கின்றான்.
மற்றொருவர்: அவன் வந்தது முதல், நம் மாடுகளில் பல நாடோறும் காணாமல் போகின்றன அவன் தான் அதற்குக் காரணம் என்று கருதுகின்றேன்
இன்னொருவர்:நாம் வேலைக்குச் சென்ற பிறகு, நம் வீடுகளில் பல பொருள்கள் காணாமல் போய் விடுகின்றன. இந்நாள் வரை காரணம் தெரியாமல் இருந்தோம். இப்போது தான் புரிகின்றது சீமாலிகன் திருவிளையாடல் என்று