7
நறுமணப் பொருட்களின் ராணி—உலகில்
நறுமணச்சுவையுடன் பவனி வருவாள்!
இந்தியநாடே ஏலக்காயின் அன்புத் தாய்விடு;
இனிதான மேற்குமலைத் தொடரின் காடுகளிலே
சிந்துகின்ற இதமான தட்பவெப்பச் சூழலிலே
சிணுங்காமல் வளர்ந்திடும் நுட்பமிகு ஏலச்செடி!
இந்திய ஏலக்காயின் தொழில் துறையில்
ஏற்றங்கள் கண்டுவரும் ஏலக்காய் வாரியத்தின்
பந்தமிகு செயற்பணிகள் இந்திய ஏலக்காயைப்
பந்தமுடன் பாரினிலே வளர்த்து வாழ்த்தும்!"
ஏலக்காயின் நறுமண இன்சுவையிலே, ஏலக்காய்ப் பண்பாடும் பண்பாட்டுப் பாடல் வாஞ்சையுடன் பிறந்திடக் கேட்கவா வேண்டும்!
முன்னர், நான் எழுதிய அன்னை தெரேசா நூலை மணிவாசகர் பதிப்பகத்தினர் சிறப்புற வெளியிட்ட்னர். இப்போது, ஏலக்காயின் கதையைச் சொல்ல அவர்கள் எனக்கு நல்ல வாய்ப்புத் தந்திருக்கிறார்கள். என் எழுத்துக்களில் அன்பும் பாசமும் கொண்ட பேராசிரியர் திரு. ச. மெய்யப்பன் அவர்கள் எனக்குக் கிடைத்திட்ட சடையப்ப வள்ளல் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருப்ப்து குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஆர்வலர்களாகிய நீங்கள் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் நான் எழுதியுள்ள எத்தனை எத்தனையோ நூல்களின் வாயிலாக என்னை—உங்கள் பூவையை நன்கு அறிவீர்கள்!—உங்கள் அன்பும் ஆதரவும் உயர்ந்தவை; மனம் உயர்த்திக் கைகளை உயர்த்திக் கும்பிடுகிறேன்.
ஒன்று:
ஏலக்காய்க்குக் கிடைக்கின்ற மரியாதை இப்போது என்மூலம் இலக்கியபூர்வமாகவும் அமைந்துவிட்டதில் நான் மெய்யாகவே மகிழ்ச்சி அடைகிறேன்.
வணக்கம்.