பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலண்டன் 13.4-86 67 வாழ்த்தினேன். எனவே இன்று (தமிழ்ப் புத்தாண்டு) நான் முற்றிலும், தமிழரோடு, தமிழ் மரபின் வழியே கலந்து மகிழ்ந்து நின்றேன். தமிழகத்தை விட்டபின் இதுவும் தமிழகமே என்ற உணர்வோடு இற்றைநாள் இவர்களுடன் மாநகரில் கழிந்தது. இன்னும் இரு நாட்களில் பல இடங் களைக் காணவும் பல அன்பரொடு கலந்துறவாடவும் ஏற் பாடுகள் செய்யப்பெற்றன. இரவு 11 மணி அளவில் உறங்கி னேன். காலை 4.30 மணிக்கே கண் விழித்தேன்.