பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பொட்டிடுவது ஏன்? மஞ்சள் பூசுவது ஏன்? பொங்கல் ஏன்? என்பன போன்ற பல வினாக்களை - அதிலும் கிறிஸ்தவ அன்பர்கள் - கேட்கிறார்களாம். அதற்கு என்ன பதில் சொல்வது என்று கேட்டார்கள். நான் எனக்கு அறிந்தவரை யில் விழாக்கள் கொண்டாடும் காரணங்களையும் பொட்டிடு தல், சாணம் இடுதல், மஞ்சள் பூசுதல் போன்றவற்றிற்கு அமைந்த காரணங்களையும் ஒருவாறு விளக்கினேன். இளம் பிள்ளைகள் உளங்கொள்ளும் வகையில், இக் காரணங்கள் பற்றியும் இன்னும் நம் நாட்டுப் பிறவழக்கங்கள் வேடிக்கை விளையாட்டு ஆகியவை பற்றியும் சிறு சிறு அளவில் இவர் கள் நடத்துகின்ற தமிழ் உலகம்' என்ற பத்திரிகையில் ஆங்கிலத்தில் எழுதுமாறு கேட்டுக் கொண்டார்கள். நானும் தாயகம் சென்றதும் எழுதுவதாகச் சொன்னேன். அப் பத்திரிகை சென்னையில் அச்சாவது ஆகையால் எழுதித் தருவது எளிதாகும். பின் அவர்கள் நடத்துகின்ற தமிழ்நாடு நிலைக்களன் (Tamilnadu Foundation lorgrLų þG) (3G)żgudrsih 25,26) பயணத்தைச் சற்றுமாற்றி அமைத்துக் கொண்டு, வரவேண்டு மென திரு. பெரியசாமி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். வாஷிங்டன் சென்றதும் அங்குள்ள சுவிஸ், விமானப் போக்கு வரத்து நிறுவனத்துடன் (எனக்குப்பயணச் சீட்டு வழங்கியது) கலந்து முடிவு செய்யலாம் என்றேன். பின் பல பொதுவான பொருள்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்து 11 மணிக்கு உறங்கச் சென்றேன். .