பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 17.5.85 இன்று காலை முறைப்படி எழுந்து காலைக் கடன்களை முடித்துக்கொண்டேன். இன்று பகல் 11-30க்கு சிகாகோ பல்கலைக்கழகத்தே தமிழ்ப்ப்யிலும் மாணவருடன் கலந்து பேசவேண்டிய பணி உள்ளது. எனவே வீட்டிலிருந்து 10-30க்குப் புறப்பட வேண்டும். அதற்குள் திரு. கிருஷ்ணன் அவர்கள் அவர் அலுவலகம் சென்று (9 மணிக்கு அலுவலகம் தொடக்கம்) சில பணிகளை முடித்து வருவதாகப் புறப்பட்டார். நானும் சிறிது நேரம் படித்து புறப்படத் தயாரானேன். சிகாகோ நகரில் உள்நகர் (Down Town என்று எல்லாவிடத்திலும் நகரின் பழைய அலுவலகங்கள் உள்ள பகுதியினை வழங்குகின்றனர்) செல்லும் வாய்ப்பு உண்டு. சிகாகோ பல்கலைக்கழகம் இந் நா ட் டு ப் பழம்ப்ெரும் பல்கலை கழகங்களுள் ஒன்று. பல ஆயிரக் கணக்கான மக்களுக்கு - பல துறைகளில் அறிவூட்டும் ஒரு சிறந்த பல்கலைக் கழகமாக இது பணியாற்றி வருகின்றது. இங்குள்ள தென் ஆசியக் கல்வி பயிலிடத்தேதான் திரு. டாக்டர். இராமாநுஜம் அவர்கள் பணியாற்று கின்றார்கள். அத் துறையிலே தமிழ் பயில்கின்றவர் ஐவர்தான் எனக் கூறினர். எனினும் அவர்கள் பல துறை களில் பயின்றும் ஆராய்ச்சி செய்தும் வருகின்றனர். அந்த இடத்தினைக் காணச் செல்லும் நோக்குடன் காலை 10.30க்கு வீட்டிலிருந்து புறப்பட்டோம். திரு. கிருஷ்ணன் அவர்கள் எனக்கென இன்று அலுவலகத்தே விடுமுறை பெற்றுக்கொண்டு வந்தார். ஐரோப்பிய நாடுகளிலும்