பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் நாடுகளுக்கு முன் சில்முறை நான் சென்றிருந்த போதிலும் இவ்வளவு தூரம் கடந்து ஒரு நாட்டில் கால்வைத்து நாளைக் கழிப்பது இதுவே முதல்தடவை. ஆம். என் பிறந்த ஊர், காஞ்சிநகர், சென்னை, பச்சைப்பர் கல்லூரி, வள்ளியம்மை கல்வி அறம், பள்ளிகள், முதல்வர், ஆசிரியர், பள்ளிகளின் பிள்ளைகள், தொண்டர்கள், பணியாளர்கள் அங்கே நடை பெற்ற பல நிகழ்ச்சிகள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், அதன் துணைவேந்தர் ஒன்றன்பின் ஒன்றாக என் உள்ளத்தில் திரைப்படக் காட்சிகள் போன்று வந்து வந்துசென்றனர். இவற்றிற்க்கெல்லாம் காரணமாய் என் அன்னையையும் என்னைவிட்டு என்றும் பிரியாது உடனுறை யும் ஆறுமுக அண்ணலையும் அவர் தம் முற்றிய குடும்பத் தினையும் எண்ணி எண்ணி அப்படியே என்னை மறந்து உறங்கிவிட்டேன். - -