பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அறைக்கு வந்ததும் பேராசிரியர் அவர்களுடன் தொலை பேசியில் நான் வந்து சேர்ந்ததைக் கூறினேன்; மகிழ்ந்தார். நாளை 10 மணி அளவில் அவர் மாணவர் ஒருவரை அனுப்பு வதாகவும் அவருடன் 1மணி வரையில் பல்கலைக் கழகத்தில் அவர் துறைத் தலைவருடன் மற்றவர்களுடனும் கலந் திருந்து, பின் நகர் நலம் காணலாம் என்றும் கூறினர். நான் மகிழ்ந்தேன். ஓரிரு பள்ளிகளையும் காண விழைந்தேன். பிறகு இங்கேயே உணவு உண்டு, சோர்வு மிகுதியால் ஒன்றும் செய்ய இயலாது அறையிலேய்ே படுத்து உறங்கி விட்டேன்.