பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் 'குளுகோஸ் எடுத்துவந்திருந்தால் வெந்நீரில் இட்டாயினும் உண்டிருக்கலாமே என்று. எதையும் வாங்க வழி இல்லை. வைத்திருந்த ஆப்பிள், பிஸ்கட், வாழைப்பழம் முதலிய வற்றை உண்டு இரண்டு. குவளை வெந்நீர் குடித்து முடித்தேன். ஒய்வு அதிகமாக இருந்ததால் இந்த நாட் குறிப்பினை அதிகமாக எழுதி முடித்தேன். பின் 9.30க்கு முறையாக இறைவனைத்தொழுது உறங்கத் தொடங் கினேன். நல்ல உறக்கம். விடியல் இயல்பாக ஐந்து மணிக்கே கண் விழித்தேன், - இந்த நிலைதான் எங்கும் இருக்குமோ என அஞ்சினேன், எனவே விரைவில் ஊர் திரும்ப கினைத்து, அப்படியே உள்ருக்கும் கடிதம் எழுதினேன். ஆயினும் இந்த ஊரை விட்டு (பாரிசை விட்டு) புறப்பட்டபின் இத்தாலிய ரோம் நகரம் தொடங்கி கடைசியாக நின்ற் சிங்கப்பூர் வரையிலும் எல்லா விடங்களிலும் நான் எதிர்பாராத விதத்தில் ப்ல. அன்பர்கள் தாமேவந்து உதவி எல்லாவிதத்திலும் துணையாக இருந்தனர். அவற்றின் நிலைகளையெல்லாம் ஆங்காங்கே காணலாம். .