பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மழை என்றால் ஈரம் என்பார்
ஈரமும் கருணையும் இன்றுகண்டேன்
தாயே தடுத்தாட் கொள்ள வந்தனையோ
உமையே உருக்காட்டி மறைந்தனையே

அழுதான் சிரித்தான் ஆடினான் பாடினான்.


ஆற்று வெள்ளம்

உன்மத்த நடையில் வீடு சேர்ந்தான்
குடித்து வந்தானென்று கொதித்தாள் மனைவி
அன்றிரவு கடல் திரண்டு கார்மேகம் ஆனதோ
கறுத்து இருண்டு சோழமண்டலத்தை சூழ்ந்ததோ
குமுறிற்று வானம்; கொட்டிற்று மழையோ மழை
காவிரி கரைபுரண்டது வீரசோழன் வெகுண்டது.
வெள்ளம் பெருகப் பெருக வேந்தனும் வருந்தினான்
பயிர்கள் மூழ்கமூழ்க சடையப்பர் தத்தளித்தார்.
படைமறவர் ஆற்றின் கரைகாத்து நின்றனர்
காளியை நினைத்து கம்பனும் குழம்பினான்.
ஆற்றுப் படுகையிலே என் ஆத்தாள் இருக்கின்றாள்
அகிலம் காப்பவள் தன்னையும் காத்துக் கொள்வாள்.

தவிப்பது மனிதபுத்தி என்று ஒருமனம் சொல்லும்