பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

தன்னவையில் முன்னவனாய் இருக்கவைத்தது
இந்நிலையில் கம்பனுக்கு எழுதும் பொறுப்பு

சோழனுக்கு வீரபாண்டியன்மேல் வெறுப்பு
படை நடந்து பாண்டியை அதிர அடித்தது.
பாண்டியனுக்கு இனியன் இலங்கை பராக்கிரமன்

பஞ்சம் அவன் சிங்களத் தீவினை தின்றது.
இலங்கையர் பசிக்கு இரங்கினான் சடையன்
ஆயிரம் தோணிகளில் அரிசி கடல் கடந்தது
ஆயினார் பசிப்பிணி. ஆற்றினார் நன்றி
வெண்ணைச் சடையன் தன்னை மீறினா னென்று
வெற்றி கொண்டு மீண்ட வேந்தன் சினந்தான்.

கம்பன்
இங்கிருந்து குடி சென்று யாழ்ப் பாணவர் ஆனவர்
பசிப்பிணிக்கு மடிவதைபொறுப்பதோ பொறுப்பு
ஐந்து பாண்டவரும் நூறு கவுரவரும்
அமர்க் களத்தில் மோதி நின்றபோது
இருதரப்புக்கும் பெருஞ்சோறு படைத்தான்
உதியன் சேரலாதன் என்கின்றது புறநானூறு
மதுரைப் போர்க்களத்தில் சோழன் நின்ற போது

தஞ்சை நெற்களத்தில் சடையன் நின்றிருந்தான்

பசிஎன்று பதைத்து சிங்களத்தூது வந்தது.