பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


தெய்வ சக்தியும் வீணாகப் போவதில்லை.
எடுத்த பிறப்பின் இயற்கைக்கு ஏற்ப
வருத்தமும் உன்னை வருத்துகின்றதம்மா
நின் கண்ணில் வடிகின்றது நீரல்ல நெருப்பு.
நின் மொழியில் வருகின்றது சொல்லல்ல சுடுசரம்
இலங்கை என்ன ஈரேழுலகும் பெரிதோ
விதிவகுத்த நேரம் அரக்கனுக்கு வரவில்லை.
அதனால் கொடு மனத்தவன் இன்னும் இருக்கின்றான்
இலங்கை எரியவில்லை. இன்று எரியப் போகின்றது.
மின்றெரியும் நின் தவக்கனலால் என் தாயே.
அன்னையைக் கண்டதற்கு அடையாளம் கொடுங்கள்
அண்ணலைக் காண்பேன் அயோத்தி காணுவீர்.
அந்த நாளும் விரைந்து வருகின்றது
அரியணையை அனுமன் தாங்குவேன் அங்கதன்
படைவாள் பற்ற உடன் பிறந்த பரதன்
வெண் கொற்றக் குடைபிடிப்பான் பின்னவர் இருவரும்
கவரி வீச கவிஞர் வாழ்த்துவார்
வசிஷ்ட மாமுனி மணிமுடி சூட்டுவான்
என்றின்னபல நல்லுரை ஆற்றினான்
தேறினாள் தெளிந்தாள். சிந்தை குளிர்ந்தாள்.
சூடாமணியும் சாகாவரமும் தந்தாள்.

தாயினும் சாலப் பரிந்து வாழ்த்தினாள்.