பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


பத்தியமிருக்கும் அன்னையே போன்று
சீதை சிறையிருந்தாள் தீயில் மூழ்கினாள்
அவள் அழுததும் தொழுததும் தனக்கன்று
தாமரைச் செல்வியே என் கதைக்குச் சீதை
தெய்வங்களும் அடியவரும் நானெடுத்த நாயகர்கள்
நிகழ்ச்சிகளும் விளைவுகளும் இருவருக்கும் பொதுவே
சென்ற யுகத்துக்கு முன் யுகத்தில் நடந்த கதை
பழந்தமிழ்ப் பாட்டுக்கள் பலவும் சொல்லும்
ராவணன் சீதையைச் சிறை எடுத்த போது
ரிஷ்யமுக சாரலில் நழுவிய நகைகளைப்
பொறுக்கி எடுத்த குரக்கின மாதர்
கையில் யாக்குவன கழுத்தில் யாத்தன
கழுத்தில் யாக்குவன காலில்யாத்தனர்
கைகளை நகைப்புக்கிடமாய் அணிந்தார் என்று
உதாரணம் காட்டும் பழந்தமிழ்ப் பாட்டு
பழமையினும் பழய புறநானூறு அன்றோ
செம்புலப் பெயல்நீர் போல அன்புடைய
நெஞ்சத்துக் காதலர் நெடுவழி சென்றபோது
ஓடினார் என்று ஊரலர் தூற்றியது
உடன் போக்கை முடித்து ஊரறிய மணமக்கள்
ஆனபின்னே வாயடைந்து அலர் ஓய்ந்ததை
வெல்போர் ராமன் அருமறைக்கு ஒலியவிழ்ந்த
பல்வீழ் ஆலமென்று அகநூல் பகருகின்றது

கண்ணகியும் கோவலனும் காவிரிப் பூம்பட்டினத்தைப்