பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தாமரைத் தண்டுருண்டு நின் தாள் மலரானதோ
நின்சிற்றடிச் சிலம்புகள் என் நெஞ்சில் குலுங்குதம்மா
சங்கரன் நின் சவுந்தரியத்தை லகரியாக்கினான்
சியாமளையே உனக்குத் தண்டகம் சொன்னவனுண்டு
எழுத்தில் அடங்கா எழுதரிய ஓவியமே
நின்பேரழகு மயக்கத்தில் சிவனும் பித்தன் ஆனால்
ஏழைப்புலவன் நான் என்னாவேன்
வார்த்தைக்கு வார்த்தை வர்ணிப்பு தனக்கென்று
கேட்டிருந்த இளவரசி கிறுகிறுத்துப் போனாள்
நின்றிருந்த நிலம் நழுவ சிறகடித்துப் பறந்தாள்
உடனிருந்த தோழி ஓசையிட மணியசைத்தாள்
உணர்வுக்கு வந்த புலவன் கற்பூரம் ஏற்றினான்

அம்பிகாபதி
தாயே சரணம் தமிழே சரணம்
வாழி மாகாளி வணங்குதும் யாமே
வளவர்குலம் ஓங்க அருளுக அம்மே
அரசிளங்குமரிக்கு ஆராதனை தந்தான்
ஒருவிழி நிலம் நோக்க ஓரவிழியால் நோக்கினாள்
அவளழகு மணிக்கரம் அணைத்தது தீபத்தை
திடுக்கிட்டாள் தோழி திகைத்தான் புலவன்