பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

தனிமையில் வேந்தனைக்கண்டு தலைகுனிந்து நின்றார்
வேந்தனும் ஆய்ந்து தெளிந்து அறிவுறுத்தினான்

சோழன்
இளமையும் இயற்கையும் செய்த பிழையோ பெரிது
சரித்திரப் பழுதை தாங்குமோ என் இதயம்
தண்டனை என்றால் தவறு அம்பலம் ஆகும்
நாடு கடத்துவதற்கு நிகரான பயணம்
வாரங்கல் நாட்டுக்கு தூதுவன் ஆக்குவோம்
பார காவியத்துக்குப் பரிசு அதுவே என்றான்

கம்பரும் இறந்தவன் பிழைத்தேன் என்றார்
அடுத்த நாள் பேரவையில் அம்பிகாபதிக்கு
எதிர்பாராத ராஜ மரியாதை—அதிர்ந்தான்
முத்திரைக் கோலும் ஓலைச்சுருளும்
பரிகாரம் சூழ படையும் கொடுத்து
வாரங்கல் நாட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்
தந்தை சதி புரிந்தா ரென்று தத்தளித்தாள் அமராவதி
கயல் விழி பழுத்து கனல் விழி ஆனதோ
தென்றலும் சுட்டது தேன் நிலவு எரித்தது
உள்ளம் புழுங்கிப் புழுங்கி உன்மத்தமானாள்

காவிரி கொள்ளிடம் காவதம் கடந்து
வெள்ளாற்றுக் கரையில் விரித்தனர் கூடாரம்
தள்ளாடு மனமும் தளர்ந்த உயிருமாக

இருப்புக் கொள்ளாமல் இருந்தான் இளம்புலவன்

கா.க.—5