பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


அதற்கு மேல் சொல்ல எனக்கு வாயில்லை
கம்பரைக் கேளுங்கள் கதைக் கட்டும் என்றான்
கம்பரோ மகனே மகனே என்று புலம்பினார்
மற்றதற்கு மேலொன்றும் பேசத்தெரியவில்லை
கூத்தர் எழுந்தார் கும்பிட்டார் நின்றார்
கூத்தர்
மன்னவன் என் மாணவன் மானம் பெரிதென்கின்றான்.
கம்பர் மகன் மன்மத ராகம் பெரிதென்கின்றான்
ராமகதை சொன்னவன் புத்திரசோகம் பெரிதென்கின்றான்
நான் கிழவன் நீதியிலும் கருணை பெரிதென்கின்றான்
நல்லோரே பெரியோரே நானும் ஒருவரம் கேட்கின்றேன்
முன்னைய நியதி என்று முடிவெடுத்து
அம்பிகாபதியை கொலைக் களத்துக்கு அனுப்புவது
தமிழைக் கொல்லுவதென்பேன் மறுப்பவர் உண்டோ
முன்னம் ஒருகடல் வெள்ளம்முத்தமிழைக் கொன்றது
அகத்தியம், வியா ழமாலை களரியாவிரை இழந்தோம்
இன்று காவியம் தந்தவன் குலத்தை இழப்பதோ

உள்ளம் உருகிற்றோ ஊன் உருகிற்றோ உணர்வு கசிந்ததோ