பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72



வெறி கொண்டு சொன்னாரோ
வீறு கொண்டு எழுந்தாரோ
கம்ப மதகளிறின் கட்டுத்தறி அறுந்ததம்மா
காலம் சென்றதோ காலன் வென்றானோ
நாட்டரசன் கோட்டையிலே ராமாயணப்
பாட்டரசன் துஞ்சினான் என்பார் என்ப
மானிடக் கம்பனுக்கு வயது நூறே எல்லை
காவியக் கம்பனுக்கு காலக் கணக்கில்லை
சாவில்லை இருக்கின்றார் சரித்திரப் புகழாக
யாமறிந்த புலவரிலே கம்பரைப் போலில்லை என்று
வள்ளுவர் இளங்கோ வரிசையிலே வைத்து
நல்ல தமிழ்ப் பாரதியும் சொன்னான் என்றால்
நான் என்ன பெரிதாகப் புகழ்ந்திடுவேன் வணங்குகின்றேன்
உலகத்து இலக்கியப் பேர் அரங்கில்
தமிழனும் இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கு

வாய்ப்பளித்த கம்பநாடன் வாழியரோ!