பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

எனினும், தமிழார்வத்தார் அனைவரும் எளிதாகக் கற்றறிந்து தமிழின்பப் பயன்பெற உதவும் வகையிலே, தெளிவுரை அமைப்பு ஒன்றும் தேவை என்பதனை நினைந்து, இத் தெளிவுரை அமைப்பை உருவாக்கி யுள்ளேன்.

பிற எட்டுத்தொகை நூற்களுக்கும் யான் எழுதிவந்துள்ள தெளிவுரை மரபையே இதனிடத்தும் கொண்டுள்ளேன். ஆகவே, இந்தத் தெளிவுரை அமைப்பும் தமிழ அன்பர்க்கும் மாணவர்க்கும் சிறந்த உதவியாக அமையும் என்று நம்புகின்றேன்.

தமிழ் நலம்று நிலவப் பல்லான் நிற்றானும் விருப்போடு உதவிவரும் பண்பாளரும், தமிழன்பும் தமிழ்ச்சால்புமே தாமாக விளங்குபவரும், இத் தெளிவுரைப் பதிப்பை அழகுற வெளியிட்டு உதவுபவரும், என்னுடைய தமிழ்ப்பணிக்கு என்றும் இனிதே துணைநின்று ஊக்கியும் உதவியும் வருபவருமான, பாரி க. அ. செல்லப்பர் அவர்களைப் பெரிதும் போற்றுகின்றேன்; நன்றியோடு நினைந்து வாழ்த்துகின்றேன்.

இதனை முறையாக அச்சியற்றித் தரும் பொறுப்பை ஏற்றுச் செவ்வையாக நிறைவேற்றித் தந்துள்ள மாருதி அச்சகத்தாரையும் நன்றியுடன் வாழ்த்துகின்றேன்.

தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் இத் தெளிவுரைப் பதிப்பு நல்லதொரு விருந்தாக விளங்கும் என்று நினைந்து, அவர்களையும் மனமுவந்து வாழ்த்திப் போற்றுகின்றேன்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழார்வம்!

--புலியூர்க் கேசிகன்