பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 181 புடைய மீனினங்களையும் நீர்நாய் எளிதிற் பற்றிக்கொள்ளு கின்றது.t இவ்வியல்பினேக் கண்டசான்ருேர், வள்ளெ யிற்று நீர்நாய்' என அகத்திற் சிறப்பித்துக் கூறியிருக்கின் றனர். தான் வாழுமிடத்தில் தண்ணிரோ, தனக்குரிய இசையோ கிடைப்பது அரிதாய காலத்தில், அது குறித்து நெடுங் தொலைவு செல்லும் நேர்மையுள்ளது. நீர்நாய்களைமட்டில் சுமார் பன்னிரண்டு வகைகளாகப் பிரித்திருக்கின்றனர். அவற்றுட் கடலில் வாழும் நாய், கடல்காய் எனப்படும். அதுவே மிகச் சிறந்ததாக மேனும் டவர் கருதுகின்றனர். அதன் பூமயிர் (Eur) பேரழகு வாய்ந்தது; அதனைக் கைசெய்து அணிந்து கொள்வதில் மேனுட்டு மக்கட்குப் பெருவேட்கை யுண்டு. அ. த ைல், அதனைப் பெறுவதுகுறித்து வேட்டையாடுவோர் பெருகினர்; அதன்பயனக அதன் பூண்டே அற்றுப்போக நேர்த்தது." நீர்நாய்கள் செங்குத்தாய் உயர்ந்திருக்கும் ஆற்றங்கரை களில் நயமான வழிகளைச் செய்து, அவற்றில் இன்புற ஏறி யிறங்குவது காண்பார்க்குப் பேரின்பம் பயக்கும் காட்சி யாகும். நீர்நாய் மிக்க மனத்திட்பம் உடையது. அது தனக்குத் தீங்கு செய்யக் கருதும் உயிரை எதிர்த்துகின்று வெல்லக் கருதும் வீறுபெற்றது. ஒருகால் வேட்டுவன் ஒருவன், நீர் நாய்கள் இரண்டினக் கண்டு, தன் கையிலிருந்த சில்லாக் கோல் (pitch fork) கொண்டு கொல்லமுயன்ருனுக, அவை யிாண்டும் அவனே எதிர்த்து கெடிது போராடி, முடிவில்

  • Of nearly dozen species the sea-otter is the most famous, partly because of its fur is so luxurious, partly because a craze for that fur has caused men to hunt if almost out of existence—Ibid. -