பக்கம்:ஐந்திணை வளம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 95 பெற்றுள்ளது போன்ற மனநிறைவை அது எனக்குத் தருவதாயிருக்கும்.' தோழியின் உள்ளார்ந்த விருப்பம் இது. இது, அவள் நினைவெல்லாம் தலைவனின் செயலினின்று அவனை விலக்கித் தலைவிபாற்கொண்டுசேர்ப்பதிலேயே இருக்கிறது என்பதைக் காட்டும். - - வளவயல் ஊரன் மருளுரைக்கு மாதர் வளைஇய சக்கரத் தாழி.--கொளைபிழையா வென்றிடை யிட்டு வருமெனின் வாழ்நாட்கள் ஒன்றி அனைத்தும் உளேன். தோழியின் விருப்பத்தைத் தலைவி கேட்கின்றாள். அவளது உறுதியான துணையால் தன் துயரத்தையும் சற்றே மறந்திருக்கின்றாள். இங்ங்னம்,மருதவளம் எங்கும் தமிழ் வளமாகவே நிரம்பி நிற்கின்றதனை நாமும் நுட்பமாக அறிந்து இன்புறல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/103&oldid=761783" இலிருந்து மீள்விக்கப்பட்டது