பக்கம்:ஐந்திணை வளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 gËśsoswr oenie உறவையும் தோழியும் அறிந்தவள். அத்துடன், அவள், தலைவியைத் தலைவன் சந்திப்பதற்கு வேண்டிய உதவிகளையும் செய்துவருபவள். - இடையிற் சில நாட்கள், தலைவன் குறித்தபடி தலைவியைச் சந்திக்க வராததால், தலைவியிடம் அந்தப் பிரிவாகிய ஏக்கம் நிறைந்திருக்கின்றது. 'அன்றாவது அவன் வரமாட்டனா என்ற ஆர்வத்தால், அவள் உள்ளம் பெரிதும் அலைமோதிக்கொண்டிருக்கிறது. அவள் தளர்வோடுபோய்க் கொண்டிருக்கின்றாள். - தலைவன் வாராதிருந்த செயலை நினைக்க நினைக்க, அவன் மீது இல்லாத சந்தேகமும் பொல்லாத ஆத்திரமும் தோழியிடத்தே எழுகின்றன. அவன்தலைவிபாற்கொண்டிருந்த காதலைக்கூட, அதனால் அவள் செறிவற்றதாகக் கருதத் தொடங்கிவிடுகின்றாள். அந்த நிலையிலே தலைவனும் வருகின்றான். அவன் வரவினைத் தோழியும் கண்டுவிடுகின்றாள். தலைவியோ அதனைக் காணாதவளாகத் தன் உள்ளத்து ஏக்கத்திலேயே முற்றவும் ஆழ்ந்திருக்கிறாள். தலைவனின் பிழையை எடுத்துக் கூறி, அவனைக் கண்டிக்கவும், அதேசமயம் தலைவியை அவனையே நினைத்திருக்கும் ஏக்கத்திலிருந்து தெளிவுகொள்ளச்செய்யவும், தோழி கருதுகின்றாள். தலைவனும் கேட்குமாறு, சற்று உரத்த குரலிலேயே, அவனைப் பழித்தும் உரைக்கத் தொடங்குகின்றாள். தலைவன் குறித்தபடி வாராமையால் எழுந்த துயரத்திலே உழன்றாலும்கூடத், தலைவிக்கு அவன்பால் ஏற்பட்டிருந்த காதலன்பு குறைந்துவிடவில்லை. மேலும், அவனையே தன் நாயகனாக வரித்துவிட்ட அவளுடைய உள்ளத்தால், அவனைப் பழித்துரை செய்யும் தோழியினது பேச்சைக் கேட்டு வாளவிருக்கவும் முடியவில்லை. அதனால், தோழிக்கு அவள் தன்னுடைய மனநிலைமையைக் கூறுகின்றாள். 'தோழி ஊர்மன்றத்துப் பலாமரத்தின், சுளை முதிர்ந்த தித்திப்பான பழத்தினை உண்டு, நீர்வேட்கையுடன் கூடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/24&oldid=761823" இலிருந்து மீள்விக்கப்பட்டது