பக்கம்:ஐந்திணை வளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - ஐந்திணை வளம் அகவொழுக்கம் அமைந்திருந்த செப்பத்தினை நமக்குத் தெளிவுபட உரைப்பனவாகும். - பெரும்பாலும், குறிஞ்சித் திணையின் பொதுவான ஒழுக்கங்கள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ஆகிய பொதுவான நோக்கத்தைக் கொண்டே நிகழ்வனவாகும். களவிலே கண்டு காதலித்துக் கூடியொழுகி வரும் தலைவனும் தலைவியும் சமுதாயத்தின் பொதுவான நியதிகளைப் பாராட்டாது, ஊழினது வலியினாலேயே இவ்வாறு ஒன்றுபட்டு நடப்பதனை மேற்கொள்வார்கள் எனல் வேண்டும். எனினும் உறவு, ஊரறிந்து ஏற்றுக்கொண்டஒன்றாகவும் உறவினர் கூடி இசைவளித்த ஒன்றாகவும் அமையாததனால், ஒருவரையொருவர் பிரியாதிருக்கின்ற நிலை வாய்ப்பதற்கு அவர்க்கு வழியில்லை. கூட்டத்திற்கு முன்னர்த் தலைவியின் கவலையும், ஆவலும் மிகுதிப்பட்டு நிற்பனவாதலும், கூட்டத்திற்குப் பின்னர் அவன் பிரிந்து போவதனால் அவளை வந்தடையும் துயரங்களும், இந்த ஒழுக்கத்திலே மிகவும் சாதாரணமாக ஏற்படுவனவேயாகும். இப்படியே, தலைவனிடத்தும் தலைவியைக் காணும் ஆர்வமும், காணாது போவோமே என்ற கவலையும் பிறவும் எழுதல் இயல்பே. எனினும், உள்ளார்ந்த இன்ப நாட்டத்தினது முருகிய சக்தி அவர்களை இழுத்துச் சென்று ஒன்றுபடுத்தி வைக்கின்றது. இதனை நாம் தெளிவாக அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/42&oldid=761843" இலிருந்து மீள்விக்கப்பட்டது