பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



35


மணி : முத்து கடைசியாக நாம் உண்மைச் செல்வததை இங்கு கண்டுவிட்டேவமல்லவா? என்றான்.

முத்து : ‘இங்கும் செல்வம் இல்லையே? என் செய்வது’ என வருந்திக் கூறினான்.

மணி : ‘என்ன?’ என வியப்புடன் வினவினான்.

முத்து : இந்நூல் நிலையமானது இம்மாளிகையில் வருவார்க்கும் போவார்க்கும் காட்சிச்சாலையாக வைக்கப்பட்டுள்ளதேயொழிய, இச்செல்வனது உள்ளத்தில் ஒரு நூலாவது இடம் பெறவில்லையே? ஏது இவனுக்குச் செல்வம்? என்றான்.

மணி பெரிதும் வெட்கிக் கலங்கினான். ‘பொருள்கள் அழிவதைப்போல நூல்களும் அழியக் கூடியவையே. கற்ற கல்வியே என்றும் அழியாச் செல்வமாகும்’ என மணி முன்பு படித்திருந்தான். அது இப்போது அவனுடைய நினைவிற்கு வந்தது. இருவரும் உண்மைச் செல்வத்தைத் தேட அடுத்த ஊர் சென்றனர்.

பக்கத்திலுள்ள ஒரு சிற்றூரில், பெரும் பணக்காரரான ஒருவர் பெரிய நூல் நிலையம் ஒன்று வைத்துள்ளாரென்றும் அந்நூல்களிற் பெரும்பான்மையானவை அவர் படித்தவையே என்றும் அறிந்து இருவரும் அங்குச் சென்று தங்கி இருந்தனர். மறுநாள் பொழுது புலர்ந்தது. மணிக்கு வெகு மகிழ்ச்சி. தன் நண்பனை நோக்கி, ‘முத்து செல்வம் இங்கு முழு உருவைப் பெற்றிருக்கிறதல்லவா?’ என்று மகிழ்வோடு வினவினான்.

முத்து : ‘நண்பா, செல்வம் இங்கு இருந்தால் தானே அதைப்பற்றியும், அதன் முழு உருவைப் பற்றியும் பேசலாம்? செல்வத்தைத் தேடிப்போகிற நமது வழியில் ஏதோ குறையிருக்கிறதாகக் காண்கிறேன்’ என்றான்.

மணி : ‘என்ன?’ என வருந்திக் கேட்டான்.

முத்து : ‘இவர் ஒரு புத்தகப் பூச்சி. அவ்வளவுதான். கற்றறிந்த பெரியோர்களிடம் உள்ள உண்மைகளைக்