பக்கம்:ஒத்தை வீடு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 புதைமண் "கொடுக்கணுமா. எடுக்கணுமா..." 'ரெண்டும்.” இருவரும், கடல் மண்ணில் தடம் போட்டார்கள். அந்தத் தடங்கள், ரெட்டை ரெட்டையாகவும், இரண்டு அடுக்குகளாகவும், ஒன்றின் மேல் ஒன்றாகவும் ஆழப் பதிந்தன. கால் பின்ன கை பின்ன அப்படிப் பின்னியது தெரியாமலேயே சீரணியின் பின்பக்கம் உட்கார்ந்தார்கள். ஆங்காங்கே ஜோடிகள் அருகருகே ஒன்றுக்கு ஒன்று பாதுகாவலாய் கட்டிப் பிடித்து கிடந்தன. முகமறியா ஜோடிகள். செல்வாவும் கவிதாவும் அந்த ஜோடிகளிடமிருந்து சிறிது விலகி உட்கார்ந்தார்கள். கவிதா, அவன் தோளில் தலை சாய்த்தாள். அப்போது பார்த்து, ஒரு வேர்க்கடலைப் பயல் முன்னால்போய் உட்கார்ந்தான். மூன்று ரூபாய்க்கு வேர்க் கடலையை வாங்கிய பிறகு, ஒரு பூக்காரி முழம் ஆறு ரூபாய் என்றாள். கவிதா, அவசர அவசரமாக இரண்டு முழம் வாங்கி, செல்வாவை, தன் தலையில் வைக்கும்படி குனிந்தாள். அவன் அவள் பின்னலை பூச்சரமாக்கிக் கொண்டிருந்தபோது, இரண்டு மூன்று பேர் அவர்களை சுற்றிச் சுற்றியே வட்டமடித்தார்கள். எங்கிருந்தோ வந்த ஒரு பேண்ட் போட்ட எருமை அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்து ரசனையோடு பார்த்தது. செல்வாவும் கவிதாவும் அந்த இடத்திலிருந்து, வடக்குப் பக்கமாக நடந்து, இன்னொரு இருட்டு வெளியில் கையோடு கை சேர்த்து உட்கார்ந்தார்கள். அவன் தோளில் இவள் கையும், இவள் தோளில் அவன் கையும் படரப் போன நேரத்தில், அங்கே சுற்றிக் கொண்டிருந்தவர்கள், இங்கே வந்துவிட்டார்கள். போதாக்குறைக்கு, அந்த பேண்ட் போட்ட எருமையும் இவர்களுக்கு முன்னால் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தது. கவிதா பயந்து போனாள். போகலாம். போகலாம்..” என்று சொன்னபடியே எழுந்தாள். 'எதுக்குப் பயப்படனும் என்றான் செல்வா. இது பயப்படுற விஷயம் மட்டுமல்ல. கற்புப் பிரச்சினை என்றாள். பிறகு ஒரு சந்தேகம் கேட்டாள் எத்தனையோ ஜோடிகள் இருக்கும்போது, நம்மை மட்டும் ஏன் இந்த தடியன்கள் கத்துறாங்க என்றாள். அவளுக்கு பதிலளிக்க முடியாமல், செல்வா குழம்பியபோது, அதே வேர்க்கடலை பையன், வந்தான். அவர்களுக்கு உபதேசம் செய்தான். "நீங்க ரெண்டு பேரும் பசங்க. அதாவது சின்ன வயசுப் பசங்க. ஒங்கள மாதிரி சின்ன வயசுக்காரங்கள மிரட்டி கற்பழிக்கிறது இதோ சுத்துறாங்களே இந்தப் பயல்களுக்கு ஒரு பொழுது போக்கு. ஏன்னா உங்களால வெளில சொல்ல முடியாது பாருங்க. ஆனால், மத்த ஜோடிங்க அப்படி இல்ல நல்லாப் பாருங்க. ஒவ்வொருவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/154&oldid=762210" இலிருந்து மீள்விக்கப்பட்டது