பக்கம்:ஒத்தை வீடு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 241 நிலையை பிரதிபலிப்பது. பொதுவாக, அயல் மகரந்த சேர்க்கைதான் தாவரங்களில் ஏற்படுகிறது. ஆனால், வேர்க்கடலையில் அயல் சேர்க்கை ஏற்படாதபடி, அது மொட்டாக கிடக்கிறது சில ஓரினக் சேர்க்கைக்காரர்கள் பெண்களோடும், பாலியல் உறவை வைத்துக் கொள்வதைப்போல், பூவரசு மரத்தில், அயல் மகரந்தச் சேர்க்கையும், சுய மகரந்தச் சேர்க்கையும் நடைபெறுகிறது. இது இயற்கை தனது சமச்சீர் நிலையை பாதிக்காமல் இருப்பதற்கு, ஏற்படுத்திய விதிவிலக்குகளாக இருக்கலாம்." "நான் எப்படி முழுமையான ஆணாக மாறுவது மேடம்?" "நீங்கள் மாறி விட்டீர்கள். எஞ்சி இருக்கிற பத்து சதவீதம், எல்லோரிடமும் உண்டு. இது இருப்பதால் ஆபத்தில்லை. ஆனால், அது உங்களுடைய பழைய அனுபவங்களை கிளறுவதால் தடுத்தாக வேண்டும். இதற்காக நான் உங்களுக்கு ஸாக்தெராபி' கொடுக்கப்போறேன்." "அப்படின்னா மேடம்." "முதலில் கட்டிலில் போய்ப்படுங்கள்" கட்டிலில் செல்வா, மல்லாக்க கிடந்தான். டாக்டர் அல்லது முனைவர் சத்தியா, ஸ்டெதாஸ்கோப் மாதிரி ஒரு கருவியை கையில் எடுத்தாள். அதன் முனையிலிருந்த கறுப்புப் பட்டையை செல்வாவின் கையில் சுற்றிக் கட்டினாள். பட்டைக்குள் இருந்து வெளிப்பட்ட இரண்டு ஒயர்களில் ஒன்றை பிளக்கில் செருகினாள். இன்னொன்று இவள் கைக்குள் வட்ட உருளைக்குள், ஊடுருவி இருந்தது. செல்வாவை முன்புபோல், அரை மயக்க நிலைக்கு செலுத்தியதும், சத்தியா, கேள்வி மேல் கேள்வியாக கேட்டாள். ஒவ்வொரு கேள்விக்கும், அவன் பதிலளிக்கும்போது, அந்த உருளையை இயக்கி சூடு போடுவார்களே, அதுபோல, அவன் உடம்பில் பட்டை வழியாக மின் அதிர்ச்சியை கொடுத்தாள். எந்த நினைவும் இப்படிப்பட்ட அதிர்ச்சியோடு இணைக்கப்படும்போது, அந்த நினைவு வேரறற்றுப் போகிறது. "செல்வா! இப்போ மோகனன் உன் முன் தோன்றுகிறான். அவன் எதனால் உனக்கு பிடித்தவனாகிறான்" "அவனின் கிறக்கமாக பார்வை, ஒற்றைக் கண்ணை மேலேற்றி, இன்னொரு கண்ணை தாழ்த்தி பார்க்கும் மோகனப் பார்வை. எம்மா. எப்படி வலிக்குது." "லேசான வலிதான். அப்புறம் செல்வா! அவனிடம் உங்களுக்கு பிடித்தமானது என்னது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/241&oldid=762306" இலிருந்து மீள்விக்கப்பட்டது