பக்கம்:ஒத்தை வீடு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சங்கரியின் தலை, பாதிப் பூந்தோட்டமாகியது. முடி வளையங்கள், பூப்பதியங்களாயின. காந்தாமணி அண்ணிதான், மெனக்கெட்டு, மார்க்கட்டுக்குப் போய் மல்லிகை, முல்லை. கனகாம்பர பூ வகைகளை, முழக் கணக்கில் வாங்கி வந்தாள். முல்லைப் பூவை முன் தலையில் வைத்து, மல்லிகைச் சரத்தை பின் தலையில் சூடி, அதன் மேல் கனகாம்பரத்தைப் பொருத்தினாள், வலது காதின் மேல்பக்கம் சொருகப்பட்ட ஒற்றை ரோஜா பிறைச் சந்திரனாய் ஒளியிட்டது. பின் தலையில் வைத்த செவ்வந்திப்பூ மஞ்சள் ஒளியாய் ஜொலித்தது. நடுத்தலையில் வில்போல் வரித்துக்கட்டப் பட்ட முல்லை வெள்ளொளியாய் பிரகாசித்தது. அண்ணி அதோடு விடவில்லை. அவளுக்குக் குங்குமம் இட்டாள். சந்தனம் தடவினாள். அவள் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல், பாவாடை தாவணி தோற்றம் காட்டும் புடவையை வலுக்கட்டாய மாகக் கட்டிவிட்டாள். இடைக்குக் கீழே மருதாணி நிறம். இடைக்கு மேல் சாம்பல் திறம். காந்தாமணி, சங்கரிக்கு சிங்காரிப்போடு விடவில்லை. சுடச் சுடப் பாயசம் காய்த்து, அதில் நாலு பச்சை முட்டைகளை உடைத்துக் கலந்து, கண்டக் காய்ச்சி, ஒரு செம்பு நிறைய நிரப்பி அவள் கையில் நீட்டியபடியே கிசுகிசுத்தாள். "ஆளுக்குப் பாதியாய் குடியுங்க.. ஆண் பாதியும், பெண் பாதியும் முழு ஆளாய் மாறிவிடும்” என்று பிளாஷ்பேக் சம்பவங்களை நினைத்தபடியே, மெய் மறந்து குறிப்பிட்டாள். என்றாலும், சங்கரி, அந்த அறைக்குள் நாணப்பட்டோ, நளினப்பட்டோ வராமல் ஏனோதானோ என்றே வந்தாள். வாசலில் கண்போட்டபடியே அந்த அறை முழுவதும் கால் போட்ட மனோகர், அவளை வழிமறித்துப் பற்றிக்கொண்டான். உடனே, அவள், செம்பை அவன் வாயில் திணித்தாள். அண்ணி சொன்னதை மெல்லச் சொன்னபடி, பாதியை தான் குடிக்காமல், அந்த செம்பு முழுவதையும் அவனைக் காலி செய்ய வைத்தாள். மனோகர், அவளை வலது கையால் இணைத்து, இடது கையால் அவள் பிடறியைத் தடவியபடி கட்டிலுக்கு நடத்தி வந்தான். மூன்று மணி நேரத்துக்கு முன்பே அண்ணி அனுப்பியபோது இருவரும் பேச வேண்டியதை எல்லாம் பேசிவிட்டார்கள். வீட்டுக்காரர், வீட்டைக் காலி செய்யவில்லை யானால், வேறொரு பூட்டைப் போடப்போவதாக மிரட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/26&oldid=762316" இலிருந்து மீள்விக்கப்பட்டது