பக்கம்:ஒத்தை வீடு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

兹6 ஒத்தை வீடு மனோகர், வேண்டா வெறுப்பாய் கையெழுத்துப்போட்ட போது நிர்வாக அதிகாரி, அவனை ஆச்சர்யமாகப் பார்த்தபடியே வெளியேறினார். சலுகைகளை வழங்குவதில் கர்ணனான அவன், எப்படிக் கம்சனானான் என்பது புரியாமல் போய்விட்டார். அவர் போன பத்து நிமிடத்தில் அஸிஸ்டென்ட் கிருஷ்ணன், ஒரு குண்டு மனிதரோடு வந்தான். அவனுக்கு ஏப்போதாவது பிரச்சினை வரும்போது, பெரிய மனிதர்களை கூட்டிவந்து மனோகருக்கு அறிமுகப்படுத்துகிறவன். "ஸார். இவர் எங்க களிலின் பிரதர், டாக்டர் குமார் மதுரையில் பிரபலமான செக்ஸாலஜிஸ்ட்." மனோகர், வந்தவரைக் கை கொடுத்து உட்கார வைக்காமல் கை கூப்பி அமரச் சொன்னான். அடுத்த இருக்கையில் உட்காரப் போ ன கி ரு ஷ ண ைன, ஒரு வே ைல ைய க் .ெ கா டு த் து வெளியேற்றினான். "மதுரைக்கு டுர்ல போங்க. டுர் ஆர்டரை டைப்படிச்சிட்டு வாங்க.." என்றான். கிருஷ்ணன், குதிக்காத குறையாய் பேர்னதும், அந்தக் கேள்வின்ய எப்படிக் கேட்பது என்பது புரியாமல், மனோகர் யோசித்தான். புரிந்தது. இன்னும் புத்திசாலித்தனம் போகவில்லை. "நீங்க எம்.பி.பி.எஸ். படித்திட்டு அப்புறம், செக்ஸ்ல பட்ட மேற்படிப்பு வாங்கி என்ன ஸார் பிரயோஜனம்.? சிட்டுக்குருவி லேகியம். லபு கபே. தங்கபஸ்பம்முன்னு விளம்பரம் படுத்துற நாட்டு வைத்தியர்ங்ககிட்டதானே நம்ம ஆளுங்க போறாங்க?" டாக்டர். குமார், நாற்காலியிலேயே துள்ளினார். நீண்ட நாளாய், ஈ ஒட்டிக் கொண்டிருப்பவருக்கு, ஒரு வடிகால் கிடைத்த ஆனந்தம். "அந்த அநியாயத்தை ஏன் கேட்கிறீங்க. செக்ஸ்ல தோத்துப் போறவன். நெருப்புல பாய்கிற விட்டில் பூச்சியாக ஆயிடுவான். உடலுறவுல செத்துப் போகிற ஆண் தேனிக்களோட முடிவுதான் இவன் முடிவும். வைட்டமின் ஈ-யில் குணமாகக் கூடிய சமாசாரத்துக்கு, நூற்றுக்கணக்குல ரூபாய் செலவழித்து, லேகியம், பஸ்பம்முன்னு தின்கிறான். கடைசியில், இதுக்குள்ளே இருக்கிற உலோகத் துகள்கள், கிட்னிக்கு வந்து அந்தக் கோளாறிலே சாகிறான். உள்ளதும் போச்சு. நொள்ளக் கண்ணா என்கிற கதை. இந்த மாதிரி அடாவடி வைத்தியர்களைத் தண்டிக்க தடா சட்டத்தை திருத்தணும்." மனோகர், திடுக்கிட்டான். இன்று அந்த வைத்தியரிடம் போக நினைத்தவன், கிழட்டுப் பயல் கெடுத்துட்டானே கிட் னி போயிருக்குமோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/67&oldid=762361" இலிருந்து மீள்விக்கப்பட்டது