பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக பாத்திரங்கள் சிவராம முதலியார், பாலாம்பாள், பாலகிருஷ்ணன் ஞாளும்பாள். - -షా5:ఫ్లోణు--* மு. த ல் அ ங் க ம் முதற் காட்சி இடம்-பெங்களூரில் லால்பாக்கை அடுத்த ஒரு பங்களாவில் ஒர் அறை. சிவராம முதலியாரும், பாலாம்பாளும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். -” சி, என்ன பாலு, உன் யுக்தி எப்படி முடியுமோ வென்று எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. - பாலா. எனக்கென்னமோ சந்தேகமே யில்லை ! சி. பார்க்கலாம்-எனக்கு பயமாகத்தானிருக்கிறது. பிள்ளை யார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தால் --அவர்களிரு வரும் சக்தித்தால் - உன் ரகசியம் வெளியானல் - சச் சரவுதான் இட்டுக் கொள்வார்களென்று தோன்று கிறது. பாலா. முதலில் சச்சரவிட்டுக் கொண்டாலும்-பிறகு-சமா தானமாய்ப் போய் விடுவார்கள். - சி. அப்புறம் கலியாணம் செய்து கொள்வார்களோ ? பாலா. அப்படித்தான் கடக்குமென்று பிரார்த்திக்கிறேன் - நம்புகிறேன் - என்ன பந்தயம் ? சி. அப்படி நடந்தால் உனக்கு என்ன வேண்டுமென்ருலும் தருகிறேன். பாலா. ஆ கான் சொன்னபடி நேரிட்டால் - கால புடை வைக்காரன் கொண்டு வந்தானே, அந்த நூறுரூபாய்