பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றே ஒன்று 3

முயன்ருல் செய்து விடலாம்; ஆல்ை 'சிங்தையை அடக் கியே சும்மா இருக்கின்ற திறம் அரிதாம்.

"சினம் இறக்கக் கற்றலும் சித்தியெல்லாம் பெற்ருலும்

மனம் இறக்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே"

என்று தாயுமானவர் சொல்கிரு.ர்.

மனத்தை இருந்தபடியே அமிழ்த்திக் கொன்றுவிட முடியுமா ? எத்தனே காலம் அது சர்வாண்டங்களையும் தன்னுடைய ஆட்சிக்குள் அடக்கி அதிகாரம் செலுத்து கிறது இராவணன், இந்திரஜித் என்று சொல்லுகிற ராட்சசர்கள் கூட இவ்வளவு துட்பமாகவும் விரிவாகவும் ஆட்சிபுரிய முடியாது. இந்தப் பேயை அடக்குவது என்பது எளிய காரியமா?

ஆனல் மனத்தை அடக்கிய மகான்கள் இல்லாமற் போகவில்லை. ராட்சசனுக்குப் புரோட்சசன் போலப் பேய் மனத்தை அடக்கி அதன் ஆட்சியினின்றும் விடுதலை பெற்றவர்கள் இந்த காட்டில் பலர் இருந்திருக்கிருர்கள்; இன்னும் இருக்கிருர்கள்; இனியும் இருப்பார்கள். மனத் தைக் கொன்று, அதைப் புதைத்துவிட்டு அந்த மயானத் திலே ஆனந்தக் கூத்தாடும் ஞானிகளே மிக அருமையாகவே பார்க்க முடியும்.

அவர்கள் மாத்திரம் எப்படி மனத்தை அடக்கினர்கள்? அவர்களும் கம்மைப்போல இருந்தவர்களே. நம்முடைய மனத்தைப் போலவே அவர்களுடைய மனங்களும் அவர் களே அலேக்கழித்துக் கொண்டிருந்தன. பிறகு முயற்சி செய்தார்கள். ஒரு வழியைத் தெரிந்து கொண்டார்கள். மனத்தை மெல்ல மெல்ல வழிக்குக் கொண்டு வந்தார்கள். இறுதியில் அதன் சேட்டையை அடக்கி ஒடுக்கிக் கிடத்தி விட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/13&oldid=548430" இலிருந்து மீள்விக்கப்பட்டது