பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடைக்கு விண்ணப்பம்

செல்வர் ஒருவருடைய தயை நமக்கு வேண்டியிருக் கிறது. அவரை கேரே அணுக நமக்குப் போதிய தைரியம் இருப்பதில்லை. அவர் கம்மை ஏறெடுத்துப் பார்ப்பாரோ மாட்டாரோ என்ற ஐயம் வேறு எழுகிறது. அதல்ை கேர் முகமாக அவரைச் சந்தித்து அவர் தயையைப் பெருமல், ஏதாவது குறுக்குவழி உண்டா என்று ஆராய்கிருேம். அவருக்கு வேண்டியவராகவும், நாம் எளிதில் அணுகக் கூடியவராகவும் ஒருவர் இருந்தால் அவரிடம் போய்க் கெஞ் சிப் பணிந்து நம் காரியத்தைச் சாதித்துக்கொள்ள வழி தேடுகிருேம். சாமியை வழிபடுவதைவிடப் பூசாரியை வழிபடுவது நமக்குக் குறுக்கு வழியாகிவிட்டது.

செல்வருடைய காரை ஒட்டுகிறவனே அணுகி அவ னுக்கு வேண்டியதைக் கொடுத்துச் சிநேகம் பண்ணிக் கொண்டு அவன் மூலமாக அவரை அடைகிற பேர்வழிகள் உண்டு. கார் ஒட்டிக்கு இவர்கள்மேல் கருணை உண்டாகி விட்டால் பிறகு செல்வருடைய கருணே கிடைப்பது எளி தாகிவிடும்.

女 -

இந்தத் தந்திரத்தை ஒரு பெண்மணி செய்கிருள். சிவ பெருமானகிய செல்வனது தயை பெருமல் அதற்காக ஏங் கித் தவிக்கும் காதலி அவள் இறைவன் பேரழகன் என்று. கேட்டிருக்கிருள். எங்கோ ஒரு முறை கண்டும் இருக் கிருள். அவளுக்கு அப்போதே ஆராத காதல் தோன்றி. விட்டது. அவனே மேலும் மேலும் பார்த்துப் பார்த்துக் கண்களால் அவன் அழகை மொண்டு மொண்டு உண்ண வேண்டும் என்ற ஆசை வளர்கிறது. தன் ஆசையை இறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/81&oldid=548501" இலிருந்து மீள்விக்கப்பட்டது