பக்கம்:ஒய்யாரி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்யாரி 15 என்று அடுக்கி, அவனே வெளியே தள்ளுவது போல் விடை கொடுத்தாள். அவன் வெளியே வந்தான். மிகவும் சிரத்தையோடு உடை யணிக்கிருந்தும், கவனக் குறைவால் ஏதேனும் சிறு குலைவு ஏற்பட்டிருக்கக் கூடாதே என்று அதிக ஜாக் கிரதையோடு முன்னும் பின்னும், மேலும் கீழும் பார்த்து, சட்டையின் காலசைச் சரி செய்தும், அங் கொரு மடிப்பை இழுத்து விட்டும், இங்கொரு தூசியைத் தட்டியும், கழுத்தைச் சுற்றிக் கிடக்கும் அங்கவஸ்திரத்தை இழுத்து அழகு படுத்தியும் வாசலைக் கடந்து உள்வரும் பிரமுகர் ஒருவர் எதிர்ப்பட்டார். அவருக்கு வயது நாற்பதுக்கு அதிகமாகவே இருக்கும். ஒருவேளை இவர் இவளது கணவனுக இருக்கலாமோ என்ற ஐயம் எழுந்தது அவனுக்கு சே, இராது. அவளுக் கென்ன, மிஞ்சிப் போனுலும் இருபத்தினுலு: வயசு கான் இருக்கும். அவ்வளவு கூட இராது. -త్థః ளுக்கு இவன் புருஷனு சே.ஆளுல் உலகத்திலே எது தான்... ... -அவன் மனதில் வீண் குழப்பம் கொக் தளித்தது. ஆனல் அவள் கல்யாணமானவளாகத் தெரியலியே. பின்னே, இப்ப போருனே இந்தப் பெரிய மனிதன்?... அவள் தானே சமையல் கிமையல் எல்லாம் செய்கிருளாம். பின் எனிந்த மேனு மினுக்கித்தனம்? வேறு ஏதாவது உத்தியோகம் இருக்குமோ அல்லது இவள் தொழிலே...' வாசுதேவன் மனதுக்கு சக்தி கிடையாது இச் சின்னஞ் சிறு புதிர்களுக்கு உரிய பெரிய விடைகளைக் கண்டு பிடிக்க அவன் எண்ணக் குழப்பத்துடன் மெது வாக கடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/17&oldid=762471" இலிருந்து மீள்விக்கப்பட்டது