பக்கம்:ஒய்யாரி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்யாரி 盛器 பூரீமான் பட்டுலேஞ்சி நாளைக்கு ஒரு பட்டு அங்க வஸ்திரம் போட்டுக் கொண்டு திரிவினர். சும்மா சும்மா அதை இழுத்து விட்டுக் கொண்டு தனது அழகை தானே ரசித்தபடி நடப்பார் பிறரிடம் பேசும் பொழுது கூட அவரது கை கழுத்தை வளைந்து தொங்கும் லேஞ்சியிலே தான் விளையாடும். அதன் காரணமாக அவருக்கு மிஸ்டர் வல்லாட்டு என்று பெயரிடலாம் என ஒரு பிரசேபனை வந்து, அது கன்ருக இல்லை; பூரீமான் பட்டுலேஞ்சி என்பது தான் தமது பண்புக்கு உகந்ததாக உள்ளது என்கிற வெட்டுப் பிரசேபனையால் தாக்குண்டு தோல்வி புற்றது. அவர் மோகினி பக்தர்களில் ஒருவர். மோகினி வீட்டுக்குப் போய் விட்டு இரவு எட்டரை மணிக்குத் திரும்பும் போது தான் அவருக்கு மூளைக் குழப்பம் ஏற். பட்டது என்கிற சேதி பரவியது. "கவனித்தீர்களா? அன்று அமாவாசை என்ருன் பஞ்சாங்கதாசன். பிரமாதமாக எதையோ கண்டுபிடித்து விட்டவன் போல. ●あ ஆமா. அதனுலே என்ன? என்று எரிந்து விழுந்தார் ஒருவர். 'முதல் பலி பெளர்ணமி யன்று. இது கடந்தது. அமாவாசை தினத்தில்.’ ‘சரிதான்டா, விஷயத்தைச் சொல்லாமல் பஞ்சாங் கத்தை வைத்துக் கொண்டு கொலம்பஸ்தனம் பண்ணப் பார்க்கியே புதுசா என்ன கண்டுட்டே, சொல்லேன்' என்று மண்டையிலடித்தார் அரைவெட்டு அறிஞர் ஒருவர். தோழர் பஞ்சாங்கம் அருள் புரிந்தார். கான் என்ன சொல்றேன்ன, பலிகளையும் கடந்த தினங்களையும் கவனிக்கும் போது அவள் பெண்ணல்ல. மோகினிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/25&oldid=762479" இலிருந்து மீள்விக்கப்பட்டது