ஒய்யாரி
25
என்பது தான் தெரியலே’ என்று ஆமோதித்தார் ஒரு அன்பர்.
வாசுதேவனுக்கும் விஷயம் விளங்கவில்லை தான். மோகினி வீட்டுக்கு வந்து போகும் பெரிய மனிதர் ஒருவர் தன்னையே அழித்துக் கொண்டது ஏன்? அதற்கு மோகினி தான் காரணமா? அல்லது, அவர் பணத்தைப் பறித்துக் கொண்டு அவருக்கு அவளே விஷமிட்டிருக்கலாமல்லவா? அவ்வாறெனில், அதை நிரூபிக்க ருஜூ?..
மோகினியை கண்டதிலிருந்தே அவன் உள்ளம் விடை கிடைக்காத கேள்விகளை விதைப்பதிலேயே கருத்தாகயிருந்தது. ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பிரச்னைகள் முளைவிட்டன. ஸ்ரீமான் பட்டுலேஞ்சி கதை... ...
அதுவும் புரியாத புதிர் தான்.
அவருக்கு மூளைக் குழப்பம் ஏற்பட்டதென்றால், அவர் மோகினியின் அறையில் எதையோ கண்டு பயந்து அலறியடித்து ஓடி வந்தது தான் காரணம் என்று வாசுதேவன் நினைத்தான்.
அன்று அவன் இருட்டிய பிறகு தான் அவள் வீடு தேடிச் சென்றான். அவன் வாசல்படியில் கால் வைக்கும் போது, உள்ளேயிருந்து ஓடி வந்த ஒருவர் முரட்டுத்தனமாக அவன் மீது மோதி பிடித்துத் தள்ளிக்கொண்டு முன்னேறினார். அவன் கீழே விழ வேண்டியவன். நல்ல வேளை. சிரமப்பட்டு காலூன்றி நின்றுவிட்டான். ‘என்னய்யா தடித்தனமா ஓடிவாறே? உனக்கு என்ன கண் குருடா?’ என்று சீறி விழவேணும் என்கிற துடிப்போடு அவர் முகத்தைப் பார்த்தான். அங்கு அவன் கண்ட மிரட்சி! திண்ணை விளக்கு அவர் முகத்திலே வெளிச்சமிட்டுக் காட்டியதில் உணர முடிந்த கலவரச் சாயை!...ஏன்? என்ன விஷயம்? இவர் இப்படி ஆடை
குலைய அலறி யடித்து வெளியேறுவதேன்?