பக்கம்:ஒய்யாரி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ខ្ចវេយឆអ៊ី 41 "ஊஹடும் என்று உறுமி, அவன் அவளே மறுபடி பும் அள்ளியணைய முயல்கையில் அவள் முரட்டுத்தனமாக அவனத் தள்ளினுள். அவளுக்கு இவ்வளவு பலம் ஏது என்று அதிசயித்தான் அவன். இருப்பினும் அவளே விட்டு விடவில்லை. அவள் அவனைப் பழிவாங்க விரும்புவதுபோல் பார்த்தாள். கர்வச் சிரிப்போடு சொன்னுள்: ராஜா, ஏனிந்த வெறியாட்டம் உனக்கு எவ்விதமான பயனும் கிட்டாது. ஏன் என்று விழியால் வினவினுன் அவன். 'உண்மையைச் சொல்லிவிடலாம். பாவம், உனக்கும் பைத்தியமோ வாழ்க்கையில் வெறுப்போ ஏற்பட்டு விட் டால்? சாகவேண்டிய வயசில்லேயே உனக்கு.' ‘என்ன டி க ச ட க ம் நடிக்கிருய்? இப்படிப் பேசி அனுப்பி விடலாம்னு பார்க்கியா மற்றவங்களையும் இப்படி மிரட்டித் தான் அனுப்பினியோ? ஐயா இந்தப் பொட்டை மிரட்டுதல்களுக் கெல்லாம் அஞ்சினவனில்லை தெரியுமா? ஹேஹ்' என்று கொக்கரித்தான் அவன். அவள் சிரித்தாள். அட என் சிங்கக் குட்டியேன்னு எாழ் பேஷ் அவர்களுக்கு உணர்த்திய மாதிரி உனக்கும் புத்தி வப் பண்ணிடலாம். ஆணுல், உன் மீது எனக்கு ஒருவித அன்பும் அனுதாபமும் ஆரம்பமுதலே ஏற்பட்டி ருக்கு. நீ ரொம்ப நல்ல பையன். ஆன உலகம் தெரியாத வன்.” ஹே, 5 ಘT கதையளக்கிறே! ஏ அம்மாளு, இப்பு பக்கத்திலே வாம்மா என்று அவளை இழுக்கக் கை நீட்டி ன்ை. 'தம்பி, நான் அம்மாளுமில்லே. குட்டியுமில்லை. அனாவசியமாப் பேசாதே'-அவள் சொன்ன மிடுக்கும் தோரணையும் அவனைத் தயங்கச் செய்தன. இதுவரை அறி யாத மோகினியின் புதுமைப் Gu##ಕ್ತ5 ஒலித்தது அது. "கான் பெண் அல்ல என்ருள் அவள் மெதுவாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/43&oldid=762499" இலிருந்து மீள்விக்கப்பட்டது