பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35


"அமைச்சரே, எனக்கு நிறைய ஆட்கள் கொடுங்கள். ஒரு சுரங்கப்பாதை அமைக்கிறேன். சுரங்கப் பாதைக் கதவின் சாவியை என்னிடம் கொடுங்கள், சுரங்கம் அமைத்தபிறகு என்னைக் கோட்டைக்கு வெளியே தள்ளிவிடுங்கள். நான் சுரங்கப்பாதை வழியாக எதிரிப் படைகளை உள்ளே வரச் சொல்கிறேன். அப்போது ஒருவர் பின் ஒருவராக

நுழையும் எதிரி வீரர்களை நம் வீரர்கள் வெட்டி வீழ்த்தட்டும்" என்றார் அந்தக் கிழவர்.

இது நல்ல சூழ்ச்சி என்று அமைச்சர்களும் படைத் தலைவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/37&oldid=1165217" இலிருந்து மீள்விக்கப்பட்டது