பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மத்திய, மாநில அரசுகள் பரிசுகள் தந்து சிறப்பளித்தன. நிறுவனங்களும் அவரது படைப்புக்களுக்குப் பரிசுகள் வழங்கி இவரைப் பெருமைப் படுத்தி வருகின்றன.

சமுத்திரத்தின் சக்தி வாய்ந்த எழுதுகோல் தொடர்ந்து நல்ல படைப்புக்களை நல்கும் என்பது எம் உறுதியான நம்பிக்கை. எதிர்ப்புகளிடையே வளரும் சமுத்திரம் எதிர்ப்புகளை வென்று ஏற்றம் பெறுவார். சமுத்திரத்தின் அலைகள் ஓய்வதில்லை . இலக்கிய உலகில் ஒரு நாளும் ஓயாது. புதிய அலைகளாய், உயாந்த அலைகளாய் உயரும். சிறக்கும்.