பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

ஒரு கோட்டுக்கு வெளியே ...



உடைந்து போன பிறகு, உலகம்மையை, ஹிட்லராக நினைத்துக் கொண்ட ஊராரால், ஐ.நா. சபை மாதிரி, புதிய சபை உருவாகியது. 'நாவிதர் மூலம்' வீட்டுக்கு வீடு, சபை கூடுவது பற்றித் தெரிவிக்கப்பட்டது. ரே - பள்ளிக்கூட மைதானத்தில் கூடியது. உலகம்மையோ, மாயாண்டியோ அங்கு போகவில்லை. கூடிய கூட்டத்தில், பலவேச நாடாரும், மாரிமுத்து நாடாரும் ஜோடியாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கருகே இன்னும் இரண்டு மூன்று பெரியவர்கள். மாரிமுத்து, பலவேசம் அருகில் இருக்கக் கிடைத்ததை மிகப்பெரிய புண்ணியமாக நினைத்தவர்போல், அந்த இரண்டு பேருடைய 'மூஞ்சியையே' பார்த்துக் கொண்டும், அவர்கள் சிரித்தால் சிரித்துக்கொண்டும், புருவத்தைச் சுழித்தால், இவர்கள் வாயைச் சுழித்துக்கொண்டும் இருந்தார்கள். கூட்டம், முதலில் பல விவகாரங்களைப் பொதுப்படையாகப் பேசியது. பலவேச நாடார் "எஸ்.பியக்கூட மாத்துறதா இருந்தோம். அவன் கடைசியில எங்க கையில காலுல விழுந்தான். போனாப் போறதுன்னு விட்டுட்டோம்" என்றார். மாரிமுத்து நாடாருக்கும் கொஞ்சம் திருப்திதான். "எங்க அத்தான் கால்ல விழுந்தான்னு சொல்லியிருக்கலாம்! சொல்ற பொய்ய, உருப்படியாவது சொல்லியிருக்கலாம். பரவாயில்ல. என் கால்ல விழுந்தான்னு சொல்லாம எங்க காலுன்னு சொன்னாரே, அதுவே பெரிய விஷயம்." கூட்டத்தில் கொலுகொண்ட இதர பெரியவர்கள், "பாரே குட்டிச் சுவராய்ப் போச்சி. ஒரு பைசல் காணணும். மாயாண்டி இருக்காரா?" என்று தற்செயலாகச் சொல்வது போல் சொன்னார்கள். பிறகு நாவிதர்மூலம், மாயாண்டியும், உலகம்மையும் வரவழைக்கப் பட்டார்கள்.

ஊர்ப்பெரியவர்கள் 'பழமும் போட்டு கொட்டையும் தின்னவர்கள்', உலகம்மை சட்டாம்பட்டிக்குப் போய், சரோஜா கல்யாணத்தை நிறுத்தியதை எடுத்துக்கொண்டால், அவள் தன்னை சரோஜாவாகக் காட்டியதை எடுத்துக்கொள்வாள். மாரிமுத்து நாடாருக்கு 'அடிவாங்கிக் கொடுத்ததை எடுத்தால், அவள் கோட்டுக்குள் பாய்வாள். ஆகையால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பிடித்துக் கொண்டார்கள்.

உலகம்மை தைரியமாக, அந்தக் கூட்டத்தைப் பார்த்தாள். 'நாமினேட்டட் எம்.பி.' மாதிரி, 'வாய்ஸ்' இல்லாத பெரியவர் அய்யாவு நாடார். தன்னுடைய 'வாய்ஸைக் காட்டினார்.