பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

ஒரு கோட்டுக்கு வெளியே ...


போகிறாள். இனிமேயும் அவள விட்டு வைக்கது மகா தப்பு! விடமுடியாது, விடக்கூடாது!”

மாரிமுத்து நாடார், வட எல்லைத் தோட்டக்காரர் ஐவராஜாவிடம் தோட்டச்சுவரை அடைத்துவிட வேண்டும் என்று வாதாடி, ஊர்க்காரர்களை எதிர்த்த சேரிப்பயலுக்கு, உலகம்மை வாழைப்பழம் கொடுத்ததைப் புள்ளிவிவரமாகக் காட்டினார். “அது எப்டி மச்சான் முடியும்? அனார்கலி சினிமாவுல உயிரோட சமாதி கட்டுனது மாதிரி இருக்குமே” என்று இழுத்துப் பேசிய ஐவராஜாவிடம், தோட்டச்சுவரை அடைக்கவில்லையானால், அவர் வயலுக்குப் பச்சைத் தண்ணீர் போகாது என்று பச்சையாகச் சொல்லிவிட்டார். பொது வாய்க்காலில் இருந்து, நீர் போகமுடியாத ‘முக்கடி முனங்கடியில்’ மாரிமுத்து நாடார் வயல் ― வாய்க்காலை நம்பியிருக்கும் இடத்தில், ‘ரெண்டு மரக்கால்’ விதப்பாட்டை வைத்திருந்த ஐவராஜா. இறுதியில் இனங்கிவிட்டார். ‘எப்டி வெளில போவா? எப்டியும் போவட்டும். நம்ம தோட்டத்த நாம அடைப்போம்!’

மாரிமுத்து நாடாருக்கு, இன்னும் ஆத்திரம் தீரவில்லை. பலவேச நாடார் இப்போது அவரை மதிப்பதே இல்லை. உலகம்மையை, ஊரைவிட்டு விரட்டவில்லையானால், அவர் இருப்பதில் அர்த்தமில்லை. வீட்டுக்காரி வேறு “நீங்க ஒரு ஆம்புளயா? ஒரு அன்னக்காவடி பொம்புளய அடக்க முடியாத நீங்க ஒரு ஆம்புளயா?” என்று இரவில் கொடுத்த ‘அடி’ அவருக்குப் பகலிலும் வலித்தது.

அந்த வலி தாங்கமுடியாமல், அவர் பல்லைக் கடித்துக் கொண்டார். அவர் மூளை தீவிரமாகச் சிந்தித்து இறுதியில் ஒரு முடிவை மேற்கொண்டது.

‘ஒண்ணுக்கும் முடியாமல் போனால் பிராந்தன ஏவி அவள கற்பழிக்கச் சொல்லணும். இதனால் (பிராந்தனுக்கு) எட்டு வருஷம் ஜெயில் கிடச்சாலும் பரவாயில்ல!’