பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஒரு கோட்டுக்கு வெளியே ...


பனையேறினாரு? பனையேறுற நாடார் சாணான்னும் ஏறாதவங்க நாடார்னும் ரெண்டு சாதியா மாறிட்டு. இப்படித்தான் சாதிங்க வந்திருக்குமோ? இத்தன சாதி இல்லாம, ஏழை சாதி, பணக்கார சாதின்னு ரெண்டு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். பறையன், பணக்காரன், பணக்கார நாடார்கூட போறான். ஆனால் நாடார்ல ஏழை பறையர்ல ஏழகூட ஏன் சேரல? சாணான்னு இவனத் தள்ளி வச்சாக்கூட, இவன் ஏழ பறச்சாதி கூடச் சேராம நாடார் நாடார்னு சொல்றவங்கூட ஏன் ஒட்டிக்கணும்? பிராமணன்ல ஏழ பறையன் மாதிரி கஷ்டப்படுறான். பறையன்ல பணக்காரப் பிராமணன் மாதிரி குதிக்கிறான். ஏழப் பறயனும், ஏழ சாணானும், ஏழ பிராமணனும் ஒண்ணாச் சேந்தா, ஊரையே மாத்திப்பிடலாம். அம்மாடி! என் புத்தி ஏன் இப்படிப் போவுது? நமக்கென்ன! எந்த ஜாதி சந்தைக்குப் போனா நமக்கென்ன? முருவா, ஒன்ன ஒருதடவை கும்பிட்டதுக்கா இப்டி புத்தியக் கெட வைக்கிற?”

இருவரும், ‘ஆசாரிக்குடி’ துவங்கும் பகுதிக்கு வந்தார்கள். உதிரமாடசாமிகோவில், கோட்டைச் சுவரோடு குளத்து முனையில் இருந்தது. நாடார் மாடனுக்கு ஒரு கும்பிடு போட்டார். வெட்டருவாளுடன் இருந்த மாடனைப் பார்க்க, உலகம்மை கொஞ்சம் பயந்தாள். அந்த ஊரில் ஐந்தாறு மாடன் கோவில்கள் உண்டு. உதிரமாடனுக்கு இங்கே இருபது மாட தேவதைகள் ‘எக்ஸ்ட்ரா’ தேவதைகள். இதே போல் கோட்டை மாடசாமி கோவில். அங்கே உதிரமாடன் ‘எக்ஸ்ட்ரா’. ‘சொள்ளமாடன் கோவில்’ - அங்கே ‘ஹீரோ’ சாமியான சுடலையாண்டிக்கு உதிர கோட்டை மாடர்கள் ‘எக்ஸ்ட்ரா’. கிராமத்தில் நாடார்கள் பல குடும்பப் பெயர்களால் அழைக்கப்பட்டார்கள். கன்னிமாடன் குடும்பம், சிவப்பன் குடும்பம், கருப்பன் குடும்பம், சங்கிலிக் குடும்பம். இப்படிப் பல குடும்பங்கள் உதிரமாடசாமி கோவில், கோட்டைச்சாமி கோவில் என்பதுபோய், இப்போதெல்லாம் சிவப்பன் கோவில், கருப்பன் கோவில் என்று கோவில்சாமிகளை குடும்பச்சாமிகளாக்கி விட்டார்கள்.

உதிரமாடனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே உலகம்மை நடந்தாள். உதிரமாடசாமி ‘ஆடி மாசம் நடக்கும் ‘அம்மங்குடையில்’ ‘சல்லடமும் குல்லாயும்’ போட்டு, தட்டி வரிஞ்சிகட்டி, தாமரப்பூ சுங்கு விட்டு, ஆனப்பந்தம் ஒரு கையில, முறுக்குத்தடி ஒரு கையிலயுமா’ குளத்தப்பாத்து வேட்டைக்கிப் போவும்போது, வில்லுப்பாட்டாளி சொன்னது மாதிரி பாக்க நல்லா இருக்கும். குளத்துல தண்ணியிருக்கே, எப்படிப் போவாரு? அடுத்த ஆடிக்குள்ள