பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

ஒரு கோட்டுக்கு வெளியே ...



சுருள்னு பேசி, முடிச்சி மாறி, ஐநூறு ரூபாதான் தந்தான். மீதி ஐநூற அப்பவ பேங்கில போட்டிருந்தா இந்நேரம் பத்தாயிரம் வந்துருக்கும். நகப் பாக்கியையும் சுருள் பாக்கியையும் வட்டியு முதலுமா வாங்கிட்டுவா" என்று அடித்து அனுப்பியவர். போன வருஷமும் பெண்டாட்டியை அடிக்கப்போகும் போது, அவரது இரண்டாவது மகன் துளசிங்கம், "அம்மயத் தொட்டா கையி ரெண்டா போயிடும். அடியும் பாக்கலாமுன்னு அரிவாள்மணை ஒன்றை வைத்துக்கொண்டு சவாலிட்டான். அசந்துபோன பலவேசம், அதிலிருந்து மனைவியுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். 'பேசினால் திட்ட வேண்டியது வரும்; திட்டுனா, தட்ட வேண்டியது இருக்கும்; தட்டினா தோளுல எடுத்து வளத்த பயமவன் அருவாமணையை எடுப்பேங்றான். காலம் கெட்டுப் போச்சி.'

கைச் சவடாலைக் குறைத்துக்கொண்ட பலவேசம் வாய்ச் சவடாலை அதிகமாக்கினார். மச்சினன் தரவேண்டிய நகைப் பாக்கிக்கும். சுருள் பாக்கிக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக ஊரில் பேசினார். மாரிமுத்து நாடார் 'கண்டுக்க வில்லை . போதாக்குறைக்கு "மாப்பிள்ள எங்க போயி முட்டணுமோ அங்க போயி முட்டட்டும்" என்று கோள் சொல்லிகளிடமும் தெரியப்படுத்தினார். இதை, பலவேசம் தன் தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக நினைத் தார். பெண்களுக்குச் சொத்துரிமை உண்டென்றும், பாகத்தைக் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்போவதாகவும் சொன்னார். மாரிமுத்து மச்சான் பனங்காட்டு நரி. போடான்னார். அதே -மயம் தங்கச்சிக்கு, தென்காசி . அல்வாவை வாங்கிக் கொடுத்தார். பொறுக்க முடியாத பலவேசம், தென்காசியில் போணியாகாத ஒரு வக்கீலைப் பார்த்தார். அவர் மிஸ்ஸஸ் பலவேசம்தான் கையெழுத்துப் போட வேண்டும் என்று ஒரு தாளை நீட்டினார். மனைவியிடம் பேசுவதை நிறுத்திய பலவேசம், ஒருநாள் மூத்த மகனிடம் பேசும் சாக்கில் "ஏல தங்கப்பழம், ஒன் மாமன் சொத்துல ஒம்மைக்கு உரிம இருக்கு. இதுல கையெழுத்துப் போடச் சொல்லுல. தேவடியா மவனை கோர்ட்டுக்கு இழுப்போம்" என்றார்.

அவர் மனைவிக்காரி ஒருவேளை கையெழுத்துப் போட்டிருப்பாள். அண்ணன் பொண்டாட்டி அவஸ்தப்படணுங்கறதுக்காக, ஒருவேளை போட்டிருக்கலாம். ஆனால், அண்ணனை தேவடியாள் மவன் என்று புருஷன்காரன் சொன்னால், இவளும் தேவடியாள் மவள்தானே. நேராகவே. அந்தப் பூணிக்குருவியைப் பார்த்து "ஓமக்கு மூள ஏன் இப்டி கெட்டுப் போவுது? பாரான் சொத்துக்கு ஏன் இப்டி நாய் மாதிரி அலையணும்" என்றாள். அவளுக்குத் திருப்தி. புருஷனிடம் பேசாமல்