பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

ஒரு கோட்டுக்கு வெளியே ...


‘மாப்பிள்ளய ஏமாற்றியது முறையா? பலவேசம் சொன்னது மாதிரி அவரு தனக்கு வாய்க்கிறவா எப்படியெல்லாம் இருக்கணும்னு நினைச்சிருக்காரோ? நாம ஏமாத்தல்ல ஒரு ஆளாயிட்டோமே! இந்தக் கல்யாணம் நடந்து அவரு ஏம்ாத்தத்த தாங்க முடியாம தூக்குப்போட்டுச் செத்தா அவரப் பெத்தவங்க மனம் என்ன பாடுபடும் ராசா மாதிரி இருக்கிற அவரு எப்டித் துடிச்சிப் போவாரு நாலு எடத்துக்குத்தான் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டுப் போவ முடியுமா? போறது இருக்கட்டும். ஒண்ணுகிடக்க ஒண்ணு பண்ணிட்டாருன்னா? திருமலாபுரத்துல ஒரு பையன் இப்டி ஆள் மாறாட்டம் நடந்ததுல விஷத்தக் குடிச்சிட்டுச் செத்துட்டான். இதுமாதிரி இவரும்... அதுக்கு நாம காரணமா ஆவுறதா? முடியாது. மாப்பிள்ளை வீட்டுல போயி, நடந்தத எப்டியும் சொல்லிடணும். என்ன ஆனாலும் சரி.’

‘எப்டிச் சொல்ல முடியும்? பாவம் சரோசாக்கா. எவ்வளவு ஆசையோட மாப்பிள்ளயப் பத்திக் கேட்டா. கல்யாணம் நின்னுபோனா அவா எப்டி அழுவா? மாரிமுத்து மாமாகூட சாப்பிட்டு போழான்னு’ பெத்த மவள கேக்கது மாதிரி கேட்டாரு. ஒனக்கும் ஒரு வழி பண்ணுறேன்னுகூடச் சொன்னார. அவங்க வீட்டுக்குத் துரோகம் பண்ணலாமா? எது துரோகம் அவங்க மட்டும் என் அழகுக்காக என்கிட்ட விஷயத்தச் சொல்லாம மூடிமறச்சி பொம்ம மாதிரி என்ன அனுப்பலாமா? அதுமட்டும் துரோகமில்லியா? எல்லாம் போவட்டும். கல்யாணம் நடந்த பிறவு மாப்பிள்ள சரோசாக்காவ அடிச்சி விரட்ட மாட்டாருங்கறது என்ன நிச்சயம்? இங்க வந்து. அந்த அக்கா கஷ்டப்படுறத நம்ம கண்ணால பாக்கனுமா? ஒருவேள. சரோசாக்கா தூக்குப்போட்டுச் செத்துட்டா என்ன பண்ணலாம் மாப்பிள்ள வீட்ல போய் நடந்ததச் சொல்லி சரோசாக்காவோட நல்ல குணத்தச் சொல்லுவோம். கட்டுனாலும் கட்டிக்குவாங்க. அப்டியே கட்டாட்டாலும் பலவேசம் மவன்தான் கட்டிக்கத் தயாராய் இருக்கானே. ஒண்ணும் ஒடமாட்டாக்கே, உதிர மாடசாமி, நீதான் சொல்லணும்.’

குழம்பிப் போய்த் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த உலகம்மை, கனைப்புச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் அய்யா, இன்னும் அந்த நார்க்கட்டிலில் குப்புறப் படுத்தபடியே கிடந்தார். அவர் சாப்பிடவில்லை என்று அப்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. கட்டிலுக்கருகேயே இருந்த அடுப்புக்குள் விறகுகளை எடுத்து. தலைகுப்புற வைத்துக்கொண்டு பூமியில் தட்டி, எரிந்து போயிருந்த விறகுகளில் படர்ந்திருந்த கரியைத் தட்டிவிட்டு, விறகுச் சுள்ளிகளை அடுப்பில் வைத்துவிட்டு, ஒரு ஈயப்பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரை